மது அருந்துவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரிப்பு

2 mins read
656fac29-11a9-49bd-96a4-1fc6e7a48519
-

கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பின் இரவுநேர கேளிக்கை திரும்பிய கையுடன்

கொள்­ளை­நோய் காலத்­தில் நடை­மு­றை­யில் இருந்த கட்­டுப்­பா­டு­

க­ளால் இர­வு­நேர கேளிக்கை தடைபட்­டது. அந்­தக் கட்­டுப்­பா­டு­கள் நீங்­கி­ய­வு­டன், மதுப் பழக்­கத்­தால் ஏற்­படும் சாலை விபத்­து­களும் அதி­க­ரித்­துள்­ளன.

இதற்கு சான்­றாக, 2022ஆம் ஆண்­டில் மதுப் பழக்­கத்­தால்

ஏற்­பட்ட சாலை விபத்­து­கள் 170 என்ற எண்­ணிக்­கை­யில் பதி­வா­னது. இது கடந்த 2018ஆம் ஆண்டு பதி­வான 178 என்ற எண்­ணிக்­கைக்­குப் பின் ஆக அதி­க­மா­னது என்று போக்­கு­

வ­ரத்து காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

சாலைப் போக்­கு­வ­ரத்து சட்­டம் கடந்த 2019ஆம் ஆண்டு திருத்­தி­ய­மைக்­கப்­பட்­டது. அதன்­படி, குடித்­து­விட்டு சாலை விபத்­துக்கு கார­ண­மா­வோர் கடு­மை­யான தண்­ட­னையை எதிர்­நோக்­கு­வர். குடி­போ­தை­யில் வாக­னம் ஓட்டி முதல் முறை­யாக குற்­றம் புரி­வோ­ருக்கு அதி­க­பட்­ச­மாக ஓராண்டு சிறைத்­தண்­டனை, $10,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டுமோ விதிக்­கப்­படலாம். இது முன்­னர் இருந்த தண்­ட­னை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில், இரு மடங்கு அதி­கம்.

இது­பற்றி கருத்­து­ரைத்த நிதித் துறை­யில் பணி­பு­ரி­யும் பிர­யன் ஓங், மேலும் கடு­மை­யான தண்­ட­னை­கள் குற்­றச்­செ­யல்­க­ளைத் தடுக்க உத­வ­லாம்.

ஆனால், மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டு­வ­தில் விடாப்­பி­டி­யாக உள்­ள­வர்­கள், அதி­லி­ருந்து தப்­பும் வழி­க­ளைக் கண்­ட­றிய முயற்சி செய்­வர் என்­கி­றார் இவர்.

"சாலைத் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் போன்றவற்றி­லி­ருந்து தப்ப நினைப்­ப­வர்­கள் இப்­பொ­ழு­தெல்­லாம் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தில் கைதேர்ந்­த­வர்­கள் ஆகி­விட்­ட­னர்," என்று கூறு­

கி­றார்.

இவ்­வாண்டு மே மாதம் மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டி­ய­தால் ஏற்­பட்ட விபத்­து­கள் அதி­க­மாக காணப்­பட்­டன. இதில் மே 28ஆம் தேதி விபத்­துக்­குள்­ளான வாகனம் ஒன்று விபத்து நடந்­த­பின் ஆடம் சாலை­யில் பக்­க­வாட்­டில் சாய்ந்து கிடந்­தது. அந்த வாகன ஓட்­டு­நர் மது­போ­தை­யில் கார் ஓட்­டிய சந்­தே­கத்­தின்­பே­ரில் கைதா­னார்.

இது நடந்த சில மணி­நே­ரம் கழித்து இதே­போன்ற விபத்து தொடர்­பாக மற்­றொ­ரு­வர் தெம்­ப­னிஸ் அவென்யூ 10ல் கைது செய்­யப்­பட்­டார்.

இதற்கு சில நாள்­க­ளுக்கு முன்­னர், 27 வயது நிரம்­பிய ஆட­வர் ஒரு­வர் மது­போ­தை­யில் வாக­னம் ஓட்­டிய சந்­தே­கத்­தின்­பே­ரில் கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரது வாடகை வாக­னம், பேஃபிரண்ட் அவென்யூ, மரினா பொலி­வார்ட் சந்­திப்­பில் நிறுத்­தி­வைக்­கப்ட்ட வாக­னம் மீது மோதி­யதால் விபத்து ஏற்பட்டது.

சிங்­கப்­பூர் சட்­டப்­படி, 100மி. லிட்­டர் ரத்­தத்­தில் 80மி. கிராம் அள­வுக்கு மேல் மது இருக்­கக்­கூ­டாது.

ஒப்­பு­நோக்க, மலே­சியா, தாய்­லாந்து, ஆஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­கள் 100மி. லிட்­டர் ரத்­தத்­தில் 50மி. கிராம் மது அள­வையே அனு­ம­திக்­கின்­றன.