ரச்சனா வேலாயுதம்
வெளிநாட்டு ஊழியர்களை கொண்டாடி அவர்களுக்கு தேவையான பல் மருத்துவம், பொருள் வாங்கும் சலுகைகள் போன்ற நன்மைகளை அறி முகப்படுத்த தேசிய தொழிற்சங்கக் காங்கிரசும் (என்டியுசி) வெளிநாட்டு ஊழியர் அமைப்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக என்டியுசி மே தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தன.
கிட்டத்தட்ட 8,000 வெளிநாட்டு ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் என்டியுசியின் துணை தலைமைச் செயலாளர் ஹெங் சீ ஹாவ் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார்.
"நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்றிவரும் வெளிநாட்டு ஊழியர்கள் கொண்டாடும் வகையில் மே தின நாளுக்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். எல்லாத் துறையிலும் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களை என்டியுசி தொடர்ந்து ஆதரித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்," என்று திரு ஹெங் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் நிதியுதவி பிரிவும் எஸ்பிஎஃப் அறநிறுவனத்தின் சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் நலவாழ்வும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டனர். இந்த ஒப்பந்தம் திரு ஹெங் முன்னிலையில் கையெழுத்து இடப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களின் நலத்தைப் பாதுகாக்க அவர் களுக்கு காப்புறுதியை வழங்கவும் பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், பரிசோதனைகளை சலுகைக் கட்டணத்தில் செய்துகொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
புதிய சலுகைகளை அங்கு அமைக்கப்பட்ட காட்சிக் கூடத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் அறிந்துகொண்டனர்.
சூன் லீயில் உள்ள வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் பொழுதுபோக்கு மன்றத்தில் மே தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினரான தற்காப்பு மூத்த அமைச்சருமான ஹெங், வெளிநாட்டு ஊழியர் களுடன் உரையாடி விளையாட்டு களில் ஈடுபட்டார்.
பல் மருத்துவம் தொடர்பான சிகிச்சைகள், பரிசோதனைகளை குறைந்த விலையில் பெற புதிய திட்டம் உதவும் என்று ஊழியர்களிடம் திரு ஹெங் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பைகள் கொடுக்கப்பட்டன.
கைப்பந்து விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். துவாஸ் தங்குவிடுதியிலும் மே தினம் கொண்டாடப்பட்டது.

