ஈசூன் வீட்டில் தீ; 17 வயது இளையர் மரணம்

2 mins read
c19437b8-3243-4b4e-883a-3e241bef51ac
-

ஈசூன் வீவக வீட்­டில் மூண்ட தீயில் 17 வயது இளை­யர் உயி­ரிழந்தார்.

சனிக்­கி­ழமை அன்று புளோக் 783 ஈசூன் ரிங் ரோட்­டில் உள்ள 12வது மாடி வீட்­டில் தீ மூண்­டது. வீடு முழு­வ­தும் நிரம்­பி­யி­ருந்த புகை­யில் இளை­யர் சுய­நி­னை­வின்றி மயங்­கிக் கிடந்­த­தா­க­வும் அவரை கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்­குக்கொண்டு சென்­ற­தா­க­வும் காவல் துறைப் பேச்­சா­ளர் ஒரு­வர் ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­தார்.

ஆனால் கடு­மை­யான தீக்­ காய­ங்­க­ளால் மறு­நாள் ஞாயிற்றுக் ­கி­ழமை காலை அவர் உயி­ரி­ழந்­தார்.

தீய­ணைப்­பா­ளர்­கள் அவரை மீட்டு தரைத்­த­ளத்­திற்கு கொண்டு வந்­த­னர். சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் இளை­ய­ரின் இத­யத் துடிப்பை மீட்­கும் சிகிச்­சை­களை மேற்­கொண்­ட­னர். பின்­னர் அவர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

சனிக்­கி­ழமை இரவு 8.55 மணிக்கு சம்­ப­வம் குறித்து தக­வல் கிடைத்­தாகக் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அங்கு அவர்­கள் வந்­த­போது வீட்­டில் தீ கொழுந்­து­விட்டு எரிந்து­கொண்­டி­ருந்­தது. தீய­ணைப்­பா­ளர்­கள் வீட்­டின் கதவை உடைத்­துக் கொண்டு உள்ளே நுழைந்­த­னர்.

வீட்­டின் படுக்கை அறை­யில் தீ மூண்­டி­ருந்­தது. தீய­ணைப்­ பாளர்­கள் நீரைப் பாய்ச்­சி­ய­டித்து தீயை அணைத்­த­னர். அந்த சம­யத்­தில் அக்­கம்­பக்­கத்­தில் குடி­ யி­ருந்த சுமார் 50 பேர் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

தீச்­சம்­ப­வத்தை காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.

2022ஆம் ஆண்­டில் நிகழ்ந்த தீச்­சம்­ப­வத்­தில் ஆறு பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று கடந்த பிப்­ர­ வ­ரி­யில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை வெளி­யிட்ட ஆண்டு அறிக்கை தெரி­விக்­கிறது.

இவர்­களில் மூவர், பிடோக் நார்த்­தில் மே மாதம் நிகழ்ந்த தீ விபத்­தில் மாண்­ட­னர். மூன்று வயது மகளும் தந்­தை­யும் இவர்­களில் அடங்­கு­வர்.