பறவைகள் மகிழ்வனத்தில் ஒரு துயரச் சம்பவம்; சிறுமியின் காதைக் கொத்திய காக்கட்டுப் பறவை

2 mins read
d48f644e-4b35-4475-80c3-fddfb6df8f69
-
multi-img1 of 2

பற­வை­கள் மகிழ்­வ­னத்தை ஆர்­வ­மாக சுற்­றிப் பார்த்த ஒரு குடும்­பம் சோகத்­தில் மூழ்­கி­யது.

அந்­தக் குடும்­பத்­தின் சிறு­மியை ஒரு காக்­கட்­டுப் பறவை தாக்கி காயப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பறவை மகிழ்­வ­னம் திறக்­கப்­பட்ட 15 நிமி­டத்­தில் தனது மகள் ஒரு பற­வை­யைப் படம் பிடித்­துக் கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென பறந்து வந்த ஒரு காக்­கட்­டுப் பறவை அவ­ரது தோளில் அமர்ந்­த­தாக இல்­லத்­த­ர­சி­யான செரின் சென் தெரி­வித்­தார்.

பின்­னர் தனது மக­ளின் காதை காக்­கட்­டுப் பறவை தொடர்ந்து கொத்­தத் தொடங்­கி­ய­தாக அவர் கூறி­னார்.

"உட­ன­டி­யாக நாங்­கள் அவ­ளைக் காப்­பாற்ற ஓடி வந்­தோம். அவ­ளி­டம் நகர வேண்­டாம் என்று நான் கூறி­னேன். பறவை வேக­மா­கக் காதைக் கொத்­திக் கொண்­டி­ருந்­தது. நான் என் நடு­வி­ர­லைப் பயன்­ப­டுத்தி பற­வை­யைத் தடுக்க முயற்சி செய்­தேன். என்­னு­டைய கண­வர் பற­வை­யைத் தள்­ளி­விட்­டார்," என்று 41 வயது மாது கூறி­னார்.

சிறு­மி­யின் காதில் அதிக ரத்­தம் வழிந்­த­தால் அரு­கி­லி­ருந்த துப்­பு­ர­வா­ள­ரி­டம் குடும்­பத்­தி­னர் உதவி கேட்­ட­னர். தொடக்­க­நிலை 1ஆம் வகுப்­பில் படிக்­கும் மாணவி யின் காது சிவந்து ரத்­தம் வழி வதைப் படங்­கள் காட்­டின.

சுமார் 15 முதல் இரு­பது நிமி­டங்­களில் அங்கு வந்த பற­வை­கள் மகிழ்­வ­னத்­தின் ஊழி­யர் ஒரு­வர் மாண­விக்கு முத­லு­தவி களைச் செய்­தார்.

கூ டெக் புவாட் மருத்­துவ மனைக்­குச் சென்ற குடும்­பத்­தி­னர் சிறு­மிக்கு முறைப்­படி சிகிச்சை பெற்­றுக்­கொண்­ட­னர்.

சம்­ப­வம் குறித்­துப் பேசிய மண்­டாய் வன­வி­லங்கு குழு­மத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர், குறிப்­பிட்ட காக்­கட்­டுப் பற­வையை காட்­சி­ய­கத்­தின் பின்­பு­றத்­தில் உள்ள வீட்­டுக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும் அது மனி­தர்­களை கொத்­தா­மல் இருக்க பயிற்சி அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.

குடும்­பத்­து­டன் குழு­மம் தொடர்ந்து தொடர்­பில் உள்­ளது.

மண்­டாய் பற­வை­கள் மகிழ்­ வ­னத்­தில் உள்ள காட்­சி­ய­கங்­கள் இயற்­கை­யான சூழ­லில் பற­வை­கள் சுதந்­தி­ர­மாக பறக்­கும் வகை­யில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இது, பற­வை­க­ளுக்­கும் நல்­லது என்று பேச்­சா­ளர் மேலும் கூறி­னார்.

"பற­வை­களும் மனி­தர்­கள் மாதி­ரி­தான்.

"பாது­காப்­பான இடத்­தில் அவை இருக்­கும்­போது தொந்­த­ரவு செய்­யக்கூடாது. பற­வை­க­ளி­ட­மி­ருந்து தள்­ளி­யி­ருப்­பது நல்­லது," என்று அவர் சொன்­னார்.