நான்கு கார்கள் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஐவர் காயம்

நான்கு கார்கள் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஐவர் காயம்

1 mins read
2b74bc24-fad1-4da1-b6dd-f04398e28e60
-

மத்­திய விரை­வுச் சாலை­யில் நிகழ்ந்த விபத்­தில் மூன்று மாத குழந்தை உட்­பட ஐந்து பேர் காயம் அடைந்­த­னர். இந்த விபத்­தில் நான்கு கார்­கள் ஒன்­றை­யொன்று மோதிக் கொண்­டன. காணொளி ஒன்­றில் பிரா­டல் பாதை, ஆஸ்­தி­ரே­லிய அனைத்­து­ல­கப் பள்­ளிக்கு அருகே ஆயர் ராஜா விரை­வுச்­சா­லையை நோக்­கிச் செல்­லும் மத்­திய விரை­வுச் சாலை­யின் இரண்டு தடங்­களில் நான்கு கார்­களும் நிறுத்தி வைக்கப்பட்­டுள்­ள­தைக் காண முடிந்­தது. நிலப்­போக்­கு­வ­ரத்து அதி­கா­ரி­க­ளு­டன் இரண்டு இழுத்­துச் செல்­லும் வாக­னங்­களும் காணப்­பட்­டன. பிற்­ப­கல் 12.20 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்து அங்கு வந்த குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் மூன்று மாத குழந்தை உட்­பட ஐவரை டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர்.