தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'சிங்கப்பூர் வெறும் கான்கிரீட் காடு அல்ல'

2 mins read
360772b8-17fb-4a0e-b9bf-f6de2528ec93
-

சிங்­கப்­பூர் வெறும் கான்­கி­ரீட்டு களால் ஆன காடு அல்ல என்­பதை தனது கண­வர் தமக்கு உணர்த்­தி­ய­தாக எவ­ரெஸ்ட் மலை உச்­சியை வெற்­றி­க­ர­மா­கத் தொட்டு மே 19ஆம் தேதி காணா­மல்­போன ஸ்ரீநி­வாஸ் சைனிஸ் தத்­தா­தி­ர­யா­வின் மனைவி சுஷ்மா சோமா தெரி­வித்­துள்­ளார்.

காணா­மல்­போன கண­வ­ருக்­குப் புக­ழா­ரம் சூட்­டும் வகை­யில் நேற்று அவர் இன்ஸ்­டா­கி­ரா­மில் பதிவு ஒன்றை வெளி­யிட்­டார். அதில், சிங்­கப்­பூ­ரில் கண­வர் சென்ற இடங்­க­ளை­யெல்­லாம் சென்­று­வந்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

"ஒவ்­வொரு வார­யி­றுதி யிலும் ஸ்ரீ தனது முது­கில் 15-20 கிலோ எடை­யுள்ள பையைத் தூக்­கிக்­கொண்டு காலை 7.00 மணிக்கு நடக்­கக் கிளம்பி விடு­வார். மாலை நான்கு மணிக்கே அவர் வீடு திரும்­பு­வார்," என்று கூறிய சுஷ்மா, மெக்­ரிட்சி நீர்த்­தேக்­கம், ரயில் பசு­மைப் பாதை, புக்­கிட் தீமா மலை உள்­ளிட்ட பல இடங்களுக்கு கண­வர் செல்­வார் என்­றார்.

"அவர் மூலம் சிங்­கப்­பூர் கான்­கி­ரீட் காடு­க­ளுக்­கும் மேலா­னது என்­பதைப் புரிந்­து­கொண்­டேன்."

"சிங்­கப்­பூ­ரில் அழ­கிய நீரோட்­டங்­களும் மழைக்­கா­டு­களும் மறைந்­துள்­ளதை சுட்­டிக்­காட்டி என் கண்­களை அவர் திறந்­தார்," என்று 36 வயது இசைக் கலைஞரான சுஷ்மா தெரி­வித்­தார்."

ஜோன்ஸ் லாங் லசால் என்ற சொத்து நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி வந்த 39 வயது ஸ்ரீநி­வாஸ் கடந்த ஏப்­ரல் 1ஆம் தேதி எவ­ரெஸ்ட் மலை ஏறு­வ­தற்­காக புறப்­பட்­டுச் சென்­றார்.

மே 19ஆம் தேதி எவ­ரெஸ்ட் சிக­ரத்­தைத் தொட்ட அவர் கீழே வர­வில்லை.

அன்று அங்­கி­ருந்து செயற்­கை­கோள் தொலை­பேசி வழி­யாக தனது மனை­வி­யு­டன் பேசிய அவர், மிக உய­ர­மான இடத்­தில் ஏற்­படும் கடு­மை­யான நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார். அவ­ரது குழு­வில் இருந்த ஷெர்பா வழி­காட்டி யும் மற்­றொரு நப­ரும் திரும்­பி­விட்­ட­னர். ஆனால் இந்­நாள் வரை ஸ்ரீநி­வாஸ் திரும்­ப­வில்லை.