புதிய புத்தக விநியோகச் சேவையை அறிமுகப்படுத்துகிறது தேசிய நூலக வாரியம்

2 mins read
ab582379-5fe3-4b7d-b28d-b4e65abb7f79
-

நூல­கத்­திற்கு அரு­கில் வசிக்­கா­த­வர்­களும் நூல­கத்­திற்­குச் செல்ல நேரம் இல்­லா­த­வர்­களும் இனி இணை­யத்­தில் புத்­த­கங்­களை இர­வல் பெற்று, வீட்­டிற்கு விநி­யோ­கம் செய்ய ஏற்­பாடு செய்­ய­லாம். 'போரோ-அண்ட்-டிலி­வர்' எனும் தேசிய நூலக வாரி­யத்­தின் புதிய ஓராண்­டு­கால முன்­னோ­டித் திட்­டம் நேற்று தொடங்­கி­யது.

அந்­தத் திட்­டத்­தின்­கீழ், புத்­த­க­வா­சி­கள் தேசிய நூலக வாரி­யத்­தின் மின் பட்­டி­ய­லில் 4 பொருள்­கள் வரை தேர்ந்­தெ­டுக்­க­லாம். ஒவ்­வொரு முறை­யும் $8 (பொருள், சேவை வரிக்கு முன்­னர்) கட்­ட­ணம் செலுத்­தி­னால், அவை வீட்­டிற்கு அனுப்­பப்­படும்.

புத்­த­கங்­கள், சஞ்­சி­கை­கள், ஒலி-ஒளிச் சாத­னங்­கள் அந்­தப் பொருள்­களில் அடங்­கும் என்று வாரி­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

புத்­த­க­வா­சி­கள் எந்­த­வொரு பொது நூல­கத்­திற்­கும் நேர­டி­யா­கச் சென்று இர­வல் பெற்ற பொருள்­க­ளைத் திரும்­பக் கொடுக்­க­லாம்.

வாசிப்­பும் கற்­ற­லும் பொது­மக்­க­ளுக்கு மேலும் எளி­தா­கக் கிடைக்­க­வேண்­டும் என்­பதே திட்­டத்­தின் நோக்­கம் என்று வாரி­யத்­தின் தலைமை நிர்­வாகி இங் சர் போங் கூறி­னார்.

மே மாதம் 2024ஆம் ஆண்­டு­வரை தொட­ரும் இந்த முன்­னோ­டித் திட்­டம், வாரி­யத்­தின் உறுப்­பி­ன­ராக இருக்­கும் அனை­வ­ருக்­கும் பொருந்­தும்.

நூல­கப் பொருள்­கள், செந்­தோசா உட்­பட தீவு முழு­வ­தும் திங்­கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்­கும் மாலை 6 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் விநி­யோ­கச் சேவை வழங்கப்படும்.

இதற்­கி­டையே, கடந்த மே மாதம் வாரி­யம் 'த லிட்­டில் புக் போக்ஸ்' எனும் குழந்­தை­க­ளுக்­கான புத்­த­கச் சந்தா சேவையை விரி­வு­ப­டுத்­தி­யது.

அதில் தாய்­மொ­ழிப் புத்­த­கங்­கள் சேர்க்­கப்­பட்­டன. சிறு வய­தி­லி­ருந்தே குழந்­தை­கள் இடையே தாய்­மொ­ழிக்­கான ஆர்­வத்தை வளர்க்க வாரி­யம் விரும்­பு­கிறது.

இது­வரை தாய்­மொ­ழிக்­கான தெரி­வுக்கு 500க்கும் மேற்­பட்­டோர் விண்­ணப்­பித்­துள்­ள­தாக வாரி­யம் கூறி­யது.