எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது

1 mins read
d0eb33ef-7d30-4ef2-a2c3-55ec5d28970e
-

தொடர்ந்து மூன்­றா­வது ஆண்­டாக மனித நோயெ­திர்ப்பு குறை­பாடு நோய்க்­கி­ருமி (எச்­ஐவி) இருப்­ப­தாக உறு­தி­செய்­யப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை குறைந்து வரு­கிறது.

கடந்த ஆண்­டில் எச்­ஐவி தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 202. இவர்­களில் 187 பேர் ஆண்­கள், எஞ்­சிய 15 பேரும் மாதர்.

2021ல் மொத்­தம் 250 பேருக்கு எச்­ஐவி தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது. இது­வரை 2012ஆம் ஆண்­டில் ஆக அதிக எண்­ணிக்­கை­யான 469 பேருக்கு எச்­ஐவி தொற்று இருப்­பது உறுதி­செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில் 2022ல் உறு­தி­செய்­யப்­பட்ட தொற்­றுச் சம்­ப­வங்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டவை ஆரம்­ப­கட்­டத்­தில் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்று அறி­யப்­ப­டு­கிறது.

மருத்­து­வப் பரா­ம­ரிப்­பின்­போ­தும் எச்­ஐவி தொற்­றுக் காலத்­தின் பிந்­தைய கட்­டத்­தி­லும் 53 விழுக்­காட்­டி­ன­ரி­டம் எச்­ஐவி தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது.

மருத்­து­வப் பரி­சோ­த­னை­யைத் தாங்­களே முன்­வந்து செய்­து­கொண்ட 17 விழுக்­காட்­டி­னர், எச்­ஐவி தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருப்­பதை ஆரம்­ப­கட்­டத்­தில் கண்­ட­றிந்­த­னர்.

எச்­ஐவி சிகிச்சை மேற்­கொள்­ளும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் அர­சாங்­கம் கட்­ட­ணக் கழிவு வழங்­கி ­வ­ரு­கிறது.

பெரும்­பா­லான பொது மருத்­துவ மருந்­த­கங்­கள், பல­துறை மருந்­த­கங்­கள், மருத்­து­வ­ம­னை­கள் ஆகி­ய­வற்­றில் தங்­க­ளுக்கு எச்­ஐவி தொற்று இருப்­ப­தாக சந்­தே­கப்­ப­டு­வோர் தங்­க­ளைப் பரி­சோ­தித்­துக்­கொள்­ள­லாம்.

1985ஆம் ஆண்டு தொடங்கி இது­வரை 9,331 பேருக்கு எச்­ஐவி இருப்­பது உறு­தி­யா­கி­யுள்ள நிலை­யில் 2,362 பேர் மாண்­டு­விட்­ட­னர். 2022ல் மாண்­டோ­ர் எண்­ணிக்கை 107.

அத்­து­டன் கடந்த ஆண்டு 15 வய­துக்­கும் 19 வய­துக்­கும் இடைப்­பட்ட நால்­வர் அந்த 107 பேரில் அடங்­கு­வர்.