ஜோகூர் சோதனைச்சாவடியில் மின்வாயில் இயங்காவிட்டால் அருகிலுள்ள முகப்பில் சிங்கப்பூரர்கள் உதவி நாடலாம்

ஜோகூர் சோதனைச்சாவடியில் மின்வாயில் இயங்காவிட்டால் அருகிலுள்ள முகப்பில் சிங்கப்பூரர்கள் உதவி நாடலாம்

1 mins read
b3e4ecef-aa90-442c-83b3-0374d17e7f04
-

ஜோகூர் பாரு­வின் சுல்­தான் இஸ்­கந்­தர் கட்­ட­டத்­தில் உள்ள மின்வாயில்­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யாத அல்­லது பதி­வு­செய்ய முடி­யாத சிங்­கப்­பூ­ரர்­கள் அந்த மின்வாயில்­க­ளுக்­குப் பக்­கத்­தில் அமைந்­துள்ள முகப்­பில் உதவி நாட­லாம் என்று மலே­சி­யா­வின் குடி­நு­ழை­வுத் துறை­யின் தலைமை இயக்­கு­னர் ருஸ்­லின் ஜூசோ தெரி­வித்­துள்­ளார்.

"மின்வாயி­லைப் பயன்­ப­டுத்­து­வ­தில் பிரச்­சி­னையை எதிர்­நோக்­கும் வரு­கை­யா­ளர்­க­ளது விவ­ரங்­கள் குடி­நு­ழைவு அதி­கா­ரி­க­ளால் சரி­பார்க்­கப்­படும். மின்வாயிலை அடுத்த நபர் தொடர்ந்து பயன்­ப­டுத்தி நெரி­சல் ஏற்­ப­டு­வதை­யும் தவிர்க்க முடி­யும்.

மின்வாயி­லைப் பயன்­ப­டுத்த விரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­கள், குறைந்­தது மூன்று மாதங்­க­ளுக்­குச் செல்­லு­ப­டி­யா­கக்­கூ­டிய கடப்­பி­தழை வைத்­தி­ருக்க வேண்­டும்.

பய­ணத்­திற்கு மூன்று நாள்­கள் முன்­ன­தாக மலே­சிய மின்­னி­லக்க வருகை அட்­டை­யை­யும் சமர்ப்­பித்திருக்க வேண்­டும்.