தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளிப் பேருந்துகளுக்கான ஓட்டுநர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை

1 mins read
4bdbd21e-75c3-4a23-80d6-9f307423ec53
-

சிங்­கப்­பூ­ரில் பள்­ளிப் பேருந்து ஓட்­டு­நர்­க­ளுக்­கான பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க உத­வும் நோக்­கில் கல்வி அமைச்சு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பள்­ளிப் பேருந்­துச் சேவை நிறு­வ­னங்­களுக்கு கூடு­த­லான எண்­ணிக்­கை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்த அனு­மதி வழங்­கப்­படும். கல்வி அமைச்சு நேற்று அதனை அறி­வித்­தது.

அடுத்த ஆண்டு முதல் பள்­ளிப் பேருந்­து­கள் மாண­வர்­களை ஏற்­றிக்­கொள்­வ­தற்­கும் இறக்­கி­விடு­வ­தற்­கும் பொது­வான இடங்­களை நிர்­ண­யிக்க அனு­மதி வழங்­கப்­படும். ஓட்­டு­நர்­கள் அதிக எண்­ணிக்­கை­யி­லான மாண­வர்­களுக்­குச் சேவை வழங்­க­வும் பெரிய பேருந்­து­க­ளைப் பயன்­படுத்தி சேவை வழங்­க­வும் அது வகை­செய்­யும்.

அம்­மு­றை­யால் மாண­வர்­கள் பய­ணம் செய்­யும் தொலைவு குறை­யும்.

தற்­போது முத­லில் பள்­ளிப் பேருந்­தில் ஏற்­றிக்­கொள்­ளப்­படும் மாண­வர்­கள் இனி சிறிது நேரம் கழித்து பேருந்­தில் ஏற­லாம்.

பள்­ளிப் பேருந்­துச் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் அவற்­றின் வர்த்­த­கத்தை நீடித்த நிலைத்­தன்மை மிக்­க­தாக வைத்­தி­ருக்க உத­வும் வகை­யில் ஈராண்டு கழித்து கட்­டண உயர்­வுக்கு அனு­ம­திக்­கப்­படும்.