ஜூரோங்கில் வாடகை வீடு தொடர்பான மோசடி; ஆடவர் கைது

ஜூரோங்கில் வாடகை வீடு தொடர்பான மோசடி; ஆடவர் கைது

2 mins read
c70fd132-4ab7-4709-9c93-78b1bfd21c25
-

ஜூரோங் வட்­டா­ரத்­தில் வாட­கைக்கு வீடு தரு­வ­தாக மோச­டி­யில் ஈடு­பட்ட சந்தேகத்தின்பேரில் 34 வயது ஆட­வர் கைது­செய்யப் பட்டுள்ளார்.

புளோக் 166ஏ யுங் குவாங் ரோட்­டில் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீட்டை வாட­கைக்கு விடு­வ­தாக ஆலன் எர் சுன் யோங் பலரை ஏமாற்­றி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

அதன் தொடர்­பில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் முதல் கிட்­டத்­தட்ட 28 புகார்­கள் பெறப்­பட்­ட­தா­கக் காவல்­துறை கூறி­யது.

வெவ்­வேறு சமூக ஊட­கங்­கள் வாயி­லாக முழு வீட்­டையோ தனி அறை­களை மட்­டுமோ வாட­கைக்­குப் பெறு­வ­தில் ஆர்­வம் காட்­டு­வோ­ரைத் தொடர்­பு­கொண்டு ஆட­வர் முன்­ப­ணம் பெற்­றுக்­கொள்­வார்.

சென்ற மாதம் $30,000க்கு மேற்­பட்ட தொகையை அவர் அவ்­வாறு பெற்­றுக்­கொண்­ட­தா­கத் தெரி­கிறது.

முன்­ப­ணம் பெற்­றுக்­கொண்ட பிறகு ஏதா­வது சாக்­குப்­போக்கு சொல்லி வாடகை ஒப்­பந்­தத்தை மீறு­வ­தோடு பணத்­தை­யும் அவர் திருப்­பித்­த­ர­வில்லை என்று பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் கூறி­னர்.

ஆட­வ­ரி­டம் $2,300 முதல் $10,200 வரை பல­ரும் பல்­வேறு தொகை­க­ளைத் தந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆட­வரை அடை­யா­ளம் கண்ட ஜூரோங் பிரிவு காவல்­துறை அதி­கா­ரி­கள் ஏப்­ரல் 5ஆம் தேதி அவ­ரைக் கைது செய்­த­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில் அவர் விசா விண்­ணப்­பம் தொடர்­பான மோச­டி­யி­லும் ஈடு­பட்­டது வெளிச்­சத்­திற்கு வந்­தது.

ஏமாற்று தொடர்­பில் எர் மீது நாளை குற்­றம் சாட்­டப்­படும். குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்­குப் பத்­தாண்­டு­கள் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

வாடகை வீடு தொடர்­பான மோச­டி­களில் சிக்­கா­ம­லி­ருக்க முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­படி பொது­மக்­க­ளுக்­குக் காவல்­துறை ஆலோ­சனை கூறி­யுள்­ளது.

வாட­கைக்கு எடுக்க விரும்­பும் வீட்டை நேரில் சென்று பார்க்­கும்­ப­டி­யும் அதன் தொடர்­பில் தங்­க­ளு­டன் பேச்சு நடத்­து­ப­வ­ரின் நம்­ப­கத்­தன்­மை­யைச் சரி­பார்க்­கும்­ப­டி­யும் ஆலோ­சனை கூறப்­பட்­டுள்­ளது.