எடுசேவ் விருதுகள் இனி விரிவுபடுத்தப்படும்: அமைச்சு

எடுசேவ் விருதுகள் இனி விரிவுபடுத்தப்படும்: அமைச்சு

2 mins read
59187a18-56b2-4f12-82f5-8ec0cb7959ea
-

மாண­வர்­கள் கல்­வி­யில் சிறப்­புத் தேர்ச்சி பெற ஊக்­கு­விக்­கும் நோக்­கில் கல்வி அமைச்சு எடு­சேவ் விரு­து­களை வழங்­கி­ வ­ரு­கிறது.

அவ்­வி­ரு­து­கள் இனி பள்­ளிக்­கும் சமு­தா­யத்­திற்­கும் பங்­க­ளித்­துள்ள மாண­வர்­க­ளை­யும் அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் விரி­வு­படுத்­தப்­பட இருக்­கின்­றன.

கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று அத­னைத் தெரி­வித்­தார்.

முத­லில் பாடங்­களில் சிறப்­புத் தேர்ச்சி பெற்ற மாண­வர்­களை அங்­கீ­க­ரிக்­கும் நோக்­கில் தொடங்­கப்­பட்ட அவ்­வி­ரு­து­கள் காலப்­போக்­கில் துணைப்­பாட நட­வ­டிக்­கை­கள் தொடர்­பி­லும் வழங்­கப்­பட்­டன என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.

கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் 35ஆம் ஆண்டு நிறை­வை­யொட்டி நடை­பெற்ற கருத்­த­ரங்­கில் திறன்­த­குதி குறித்த கலந்­து­ரை­யா­ட­லில் அமைச்­சர் சான் அவ்­வாறு குறிப்­பிட்­டார்.

ஒரு­வ­ரின் சாத­னை­கள் மட்­டுமே வெற்றி என்று கரு­தா­மல் பங்­க­ளிப்­பிற்­கா­க­வும் ஒரு­வரை வெற்­றி­யா­ள­ராக கௌர­விக்­க­லாம் என்­பதை வலி­யு­றுத்­தும் சமு­தா­ய­மா­கத் தாம் சிங்­கப்­பூ­ரைக் காண விரும்­பு­வ­தாக அவர் கூறி­னார்.

"ஏழை, பணக்­கா­ரர், கல்­வி­மான், படிக்­கா­த­வர் என்ற பேதங்­க­ளின்றி யார் வேண்­டு­மா­னா­லும் சமு­தா­யத்­திற்­குப் பங்­களிக்க முடி­யும்.

"அந்­தப் பங்­க­ளிப்பு அவ­ர­வர் தகு­திக்கு ஏற்­ற­வாறு அமை­வது அவ­சி­யம்," என்று திரு சான் வலி­யு­றுத்­தி­னார்.

வெற்றி, திறன்­த­குதி ஆகி­ய­வற்­றின் பொருளை மறு­வ­ரை­யறை செய்ய வேண்­டி­ய­தன் தேவை குறித்து அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் எதிர்­கொள்­ளும் புதிய சவால்­கள், சமூ­கத்­தில் அதி­க­ரிக்­கும் வேற்­று­மை­கள் ஆகி­ய­வற்­றுக்­கி­டையே வெற்றி, திறன்­த­குதி ஆகி­ய­வற்றை மறு­வரை­ய­றுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கிறது என்று அமைச்­சர் எடுத்­து­ரைத்­தார்.

சிங்­கப்­பூ­ரில் வெற்றி என்­பது ஒரு குழு முயற்­சி­யாக அமைய வேண்­டும். அது ஒரு குழு விளை­யாட்டு. அவ­ர­வர் தனக்­கான பந்­த­யத்­தில் தனிப்­பட்ட முறை­யில் ஓடு­வது அன்று," என்­றார் அவர்.

சமூ­கத்­தின் வெவ்­வேறு பிரி­வு­க­ளைச் சேர்ந்­தோர், தங்­கள் சொந்த சாத­னை­க­ளுக்­கும் அப்­பால், இயன்­ற­வ­ரை­யில் ஆகச் சிறந்த பங்­க­ளிப்பை வழங்க வேண்­டும். அவர்­க­ளின் ஒட்­டு­மொத்த பங்­க­ளிப்பே திறன் தகு­தியை நிர்­ண­யிக்­கும் என்று அமைச்­சர் சொன்­னார்.

திறன்­த­குதி என்ற அம்­சம் சிங்­கப்­பூ­ருக்கு கடந்த 50 ஆண்­டு­க­ளாக வெற்றி ஈட்­டித் தந்­த­தா­கத் திரு சான் கூறி­னார்.