தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்றில் ஒரு பங்கினருக்கு உதவி கிட்டியது

2 mins read
69ab7d04-1596-4490-8d9f-45c8325f6e97
-

இன அடிப்படையிலான ஒதுக்கீட்டின்கீழ் வீவக வீடுகளை விற்பனை செய்ய உதவி கோரியோர் குறித்து அமைச்சர் சண்முகம்

சென்ற ஆண்டு இன அடிப்­ப­டை­யி­லான ஒதுக்­கீட்­டின்­கீழ் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) வீட்டை விற்­பனை செய்­வது தொடர்­பில் உதவி கோரி விண்­ணப்­பித்த மூன்­றில் ஒரு பங்­கி­ன­ருக்கு வெற்றி கிடைத்­த­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

வீட்டை விற்­ப­தற்­குக் கூடு­தல் கால அவ­கா­சம், கட்­ட­ணச் சலுகை உள்­ளிட்­டவை தொடர்­பில் அவர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

அவ்­வாறு விற்­கப்­பட்ட வீடு­கள் சென்ற ஆண்டு விற்­ப­னை­யான மறு­விற்­பனை வீடு­க­ளின் எண்­ணிக்­கை­யில் 1.5 விழுக்­காடு என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் கூறி­னார்.

கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் 35ஆம் ஆண்டு நிறை­வுக் கருத்­த­ரங்­கில் அவர் உரை­யாற்­றி­னார்.

இன ஒருங்­கி­ணைப்பு ஒதுக்­கீட்­டுக் கொள்­கையை முற்­றி­லுமா­கக் கைவி­டு­வ­தற்­குப் பதி­லாக சிறிய எண்­ணிக்­கை­யி­லா­னோரே பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் அவர்­களின் பிரச்­சி­னை­களை நீக்­குப்­போக்­கு­டன் கையா­ளும் அணு­கு­மு­றையை அர­சாங்­கம் பின்­பற்­று­கிறது.

1989ஆம் ஆண்டு இன அடிப்­ப­டை­யி­லான வீடு ஒதுக்­கீட்­டு­முறையை அர­சாங்­கம் அறி­மு­கம் செய்­தது.

ஒவ்­வொரு வீவக அடுக்­கு­மாடிக் குடி­யி­ருப்­பி­லும் அதற்­கும் அப்­பால் அக்­கம்­பக்­கத்­தி­லும் இன ரீதி­யி­லான வளா­கங்­கள் தோன்­றா­மல் தடுக்க அக்­கொள்கை உத­வு­கிறது.

இந்­நி­லை­யில், சென்ற ஆண்டு வீவக புளோக்­கு­களில் மூன்­றில் ஒரு பங்­கும் வீவக அக்­கம்­பக்­கப் பேட்­டை­களில் பத்­தில் ஒரு பங்­கி­லும் இன அடிப்­ப­டை­யி­லான ஒதுக்­கீட்டு வரம்­பு­கள் எட்­டப்­பட்­ட­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

ஒதுக்­கீட்­டுக் கொள்கை நடை­மு­றை­யில் இல்­லா­விட்­டால் இன ரீதி­யி­லான வளா­கங்­கள் உரு­வாகி­யி­ருக்­கும் என்­பதை அவர் சுட்­டி­னார்.

"சிங்­கப்­பூ­ரில் இன நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­விக்க அர­சாங்­கம் மேற்­கொள்­ளும் பல்­வேறு முயற்­சி­களில் இந்த இன அடிப்­ப­டை­யில் வீடு­களை ஒதுக்­கும் கொள்­கை­யும் ஒன்று.

"இன­வா­தம் என்­பது மனித இயல்பு என்­பதை நாம் ஒப்­புக்­கொள்ள வேண்­டும்.

"மற்­றெந்த சமூ­கத்­தை­யும்­போலவே சிங்­கப்­பூ­ரி­லும் இன­வாதம் நில­வு­கிறது.

"ஆனால் அது இங்கு வேரூன்­றா­மல் இருப்­பதை உறு­தி­செய்ய நாம் கடி­ன­மாக முய­ல­வேண்­டும்," என்று அமைச்­சர் சண்­மு­கம் வலி­யு­றுத்­தி­னார்.

சீனர், மலாய்க்­கா­ரர், இந்­தி­யர், மற்ற இனத்­த­வர் என்ற பாகு­பாடு­க­ளைக் களை­வது சிங்­கப்­பூ­ரில் எப்­போ­தா­வது சாத்­தி­யமா என்ற கேள்­விக்கு அவர் பதி­ல் அளித்­தார்.

"இத்­த­கைய பாகு­பா­டு­களில் அதி­கம் கவ­னம் செலுத்­தத் தேவை­யில்லை. ஏனெ­னில் இப்­பா­கு­பா­டு­கள் அர­சாங்­கம் சில பிரி­வி­ன­ருக்கு உத­வு­வ­தற்­காக நிறு­வப்­பட்டவை. இவற்­றுக்­கும் வேலை­கள், இதர வாய்ப்­பு­க­ளுக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை," என்று அமைச்­சர் கூறி­னார்.

திரு தர்­மன் சண்­மு­க­ரத்­னம் அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வது குறித்­துக் கேட்­கப்­பட்­டது.

"அவர் முதிர்ச்­சி­ய­டைந்த மனி­தர். இது அவ­ரது முடிவு," என்று பதி­ல­ளித்­தார் அமைச்­சர் சண்­மு­கம்.

மக்­கள் செயல் கட்சி வேறு­பட்ட கண்­ணோட்­டங்­களை ஒப்­புக்­கொள்­வ­தில்லை என்ற கருத்து முன்­வைக்­கப்­பட்­டது.

அதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், "தற்­போ­தைய நாடா­ளு­மன்­றத்­தைத் தேர்ந்­தெ­டுத்­தது அக்­கட்சி அன்று. மக்­களே அதைத் தேர்ந்­தெ­டுத்­த­னர்," என்று கூறி­னார்.