ஆகஸ்ட் 20ஆம் தேதி பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை

ஆகஸ்ட் 20ஆம் தேதி பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை

1 mins read
0e72157e-1751-44a9-b09c-b023f9995892
-

பிர­த­மர் லீ சியன் லூங் இவ்­வாண்­டின் தேசிய தினப் பேரணி உரையை ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆற்­று­வார் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று அறி­வித்­தது.

அங் மோ கியோ­வில் உள்ள தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் பேரணி உரை நடைபெறும்.

ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­ற­மாக வகைப்­ப­டுத்­தும் குற்­ற­வி­யல் சட்­டப் பிரிவு 377A நீக்­கப்­படும் என்று சென்ற ஆண்­டின் தேசிய தினப் பேர­ணி­யில் திரு லீ அறி­வித்­தார். அதே­வே­ளை­யில் சிங்­கப்­பூர் திரு­ம­ணத்­தின் வரை­ய­றைக்கு மதிப்­ப­ளிக்­கும் என்­றும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

சிங்­கப்­பூர் அப்­போது கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வலை எதிர்­கொண்­டி­ருந்த நிலை­யில், உட்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் அணி­வ­தற்­கான தேவை தளர்த்­தப்­படும் என்­றும் பிர­த­மர் அறி­வித்­தார்.

வட்­டா­ரத்­தின் நிலைத்­தன்­மைக்கு ஏற்­ப­டக்­கூ­டிய இடை­யூறு­க­ளுக்­கும் பொரு­ளி­யல் சவால்­க­ளுக்­கும் மன­ரீ­தி­யா­கத் தயா­ரா­கும்­படி சிங்­கப்­பூ­ரர்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

பாய லேபார் ஆகா­யத் தளம் இடம் மாற்­றப்­பட்­ட­தைத் தொடர்ந்து, பாய லேபா­ரில் 150,000 புதிய வீடு­க­ளைக் கட்­டு­வது தொடர்­பான திட்­டங்­கள் குறித்­தும் திரு லீ அந்­தப் பேர­ணி­யில் விவ­ர­மாக எடுத்­துக்­கூறியி­ருந்­தார்.

துவாஸ் துறை­மு­கம், சாங்கி விமான நிலை­யத்­தின் ஐந்­தாம் முனை­யம் ஆகி­ய­வற்றை அமைப்­பது தொடர்­பான திட்­டங்­கள் குறித்­தும் அவர் விவ­ரித்­தார்.