தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பசுமைத்துறை வேலைவாய்ப்புகளால் மூன்றாம் காலாண்டில் ஆட்சேர்ப்பு மீட்சி கண்டது: ஆய்வு

2 mins read
078f4b70-17ba-466a-9a8f-58d6044b974e
-

பசு­மைத் தொழில்­களை நிரப்­பு­வதற்­கான தேவை, சிங்­கப்­பூ­ரில் ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்கை மீட்­சி­காண உத­வி­யி­ருக்­கிறது.

நிச்­ச­ய­மற்ற பொரு­ளி­யல் சூழ­லுக்கு இடை­யி­லும் இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டுக்கு முன்­பாக, சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் ஆட்­சேர்ப்­பில் கவ­னம் செலுத்த அது கைகொ­டுத்­துள்­ள­தாகக் கூறப்பட்டது.

மற்ற துறை­க­ளி­லும் ஆட்­சேர்ப்பு வலு­வ­டைந்­தி­ருப்­ப­தால் மூன்­றாம் காலாண்­டுக்­கான நிகர வேலை­வாய்ப்பு விகி­தம் மேம்­பட்டு 34 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

சிங்­கப்­பூ­ரில் ஒன்­பது துறை­களைச் சேர்ந்த 500க்கு மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் கலந்­து­கொண்ட அண்மைய கருத்­தாய்வில் அது தெரிய­வந்­தது.

ஆட்­சேர்ப்பு நிறு­வ­ன­மான 'மேன்­ப­வர் குரூப்' அக்­க­ருத்­தாய்­வின் முடி­வு­களை நேற்று வெளி­யிட்­டது.

கரி­மச் சேவை, பசுமை நிதி நடு­வ­மாக சிங்­கப்­பூர்் தன்னை நிலை­நாட்ட முய­லும் வேளை­யில், நிறு­வ­னங்­கள் பசு­மைத் துறை சார்ந்த பத­வி­களில் ஊழி­யர் எண்­ணிக்­கையை அதி­கரிப்­ப­தாக 'மேன்­ப­வர் குரூப் சிங்­கப்­பூர்' நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர்க் கிளை மேலா­ளர் லிண்டா தியோ கூறி­னார்.

2050க்குள் கரிம வெளி­யேற்­றம் அறவே இல்­லாத நிலையை அடைய சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது.

பரு­வ­நிலை சார்ந்த இலக்­கு­களைக் கவ­னத்­தில் கொண்டு, நிறு­வ­னங்­கள் அவற்­றின் வர்த்­தக உத்­தி­களை வகுத்­து­ வ­ரு­வ­தால், பசு­மைத் தொழில்­க­ளுக்­கான ஊழி­யர் தேவை தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­க­லாம் என்­று திருவாட்டி தியோ குறிப்பிட்டார்.

இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டுக்­கான வேலை­வாய்ப்­புக் கருத்­தாய்­வில் 510 நிறு­வ­னங்­கள் கலந்­து­கொண்­டன.

அதில் 48 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் இவ்­வாண்டு ஜூலை முதல் செப்­டம்­பர் வரை ஆட்­சேர்ப்பு எண்­ணிக்­கையை உயர்த்­தத் திட்­ட­மி­டு­வ­தா­கத் தெரி­வித்துள்ளன.

இருப்பினும் 14 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யத் திட்­ட­மிட்­டுள்­ளன.

மேலும் 36 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் தற்­போ­துள்ள ஊழி­யர் எண்­ணிக்­கை­யைத் தொட­ரத் திட்­ட­மி­டு­வ­தா­கக் கூறின.

எஞ்­சி­யுள்ள இரண்டு விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் அதன் தொடர்­பில் இன்­னும் முடி­வெ­டுக்­க­வில்லை.

கருத்­தாய்­வில் கலந்­து­கொண்ட ஒன்­பது துறை­க­ளைச் சேர்ந்த நிறுவனங்களிலும் ஆட்­சேர்ப்பு எண்­ணிக்கை 22 முதல் 57 விழுக்­கா­டாக இருக்­கு­மெ­னக் கூறப்­பட்­டுள்­ளது.

எரி­சக்தி, பொதுப் பய­னீடு ஆகிய துறை­களில் ஆட்­சேர்ப்பு வலு­வாக இருக்­கு­மென ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.