தைவானில் காணாமற்போன சிங்கப்பூரரின் சடலம் மீட்பு

தைவானில் காணாமற்போன சிங்கப்பூரரின் சடலம் மீட்பு

2 mins read
1e7d93a5-b352-4258-991d-927e47b3b077
-

விடு­மு­றை­யைக் கழிப்பதற்காகத் தைவா­னுக்­குத் தனியே சென்ற

22 வயது சிங்­கப்­பூ­ரர் அமி­லியா மூ வென் சியின் சட­லம் அந்நாட்­டின் கிழக்­குப் பகு­தி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அவர் சிங்­கப்­பூர் திரும்­பத் திட்­ட­மிட்­டி­ருந்த இரண்டு நாள்­களுக்கு முன்­னர் பெற்­றோ­ரின் குறுஞ்­செய்­தி­க­ளுக்­குப் பதில் அளிக்­க­வில்லை. மறு­நாள் அவ­ரது உடல் ஹுவா­லி­யன் நீர்ப்­ப­கு­தி­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில் திரு­வாட்டி மூ நீரில் மூழ்­கி­யது தெரி­ய­வந்­த­தாக 'ஏஷியா ஒன்' செய்தி இணை­யத்­த­ளம் கூறி­யது.

குற்­றச்­செ­யல் ஏதும் நடந்­திருக்­கக்­கூ­டிய சாத்­தி­யத்­தை தைவா­னி­யக் காவல்­து­றை­யி­னர் நிரா­க­ரித்தனர்.

சென்ற மாதம் 7ஆம் தேதி காலை, மாது ஒரு­வ­ரின் உடல் ஹுவா­லி­யன் நீர்ப்­ப­கு­தி­யில் மிதந்­து­கொண்­டி­ருந்­த­தாக தைவா­னிய ஊட­கங்­கள் தக­வல் வெளியிட்­டி­ருந்­தன. மாதின் உட­லில் வெளிப்­ப­டை­யான காயங்­கள் ஏதும் தென்­ப­ட­வில்லை.

மாண்ட மாதின் குடும்­பத்­தி­ன­ருக்கு ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்­துக்­கொண்ட சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு, தைப்­பே­யில் உள்ள சிங்­கப்­பூர் வர்த்­தக அலு­வ­ல­கத்­து­டன் இணைந்து அவர்­க­ளுக்கு உத­வி­வ­ரு­வ­தா­கக் கூறி­யது.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் சட்­டப் படிப்பை மேற்­கொண்­டி­ருந்த மூ, தேர்­வு­கள் முடிந்­த­தைக் கொண்­டா­டக் கடந்த ஏப்­ரல் மாதம் தைவான் சென்­றி­ருந்­தார்.

மே 8ஆம் தேதி சிங்­கப்­பூர் திரும்ப அவர் திட்­டமிட்­டி­ருந்­தார். ஆனால், மே மாதம் 6ஆம் தேதி அவ­ரைத் தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை. திரு­வாட்டி மூ தைவா­னுக்­குச் சென்­றது இது முதல் முறை அன்று என்றும் தைவானில் தங்கள் குடும்பத்தின் மற்ற உறுப்­பி­னர்­களை மூ சந்­தித்­த­தாகவும் பெற்றோர் தெரி­வித்­த­னர்.

வரும் ஆகஸ்ட் மாதம் வழக்­கறி­ஞர் தேர்வை எழுத அவர் திட்­ட­மிட்­டி­ருந்­த­தா­க­வும் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் சட்ட நிறு­வ­னம் ஒன்­றில் பணி­யில் சேரவிருந்­த­தா­கத் தெரிகிறது.