சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் அதன் பங்குகளின் விலை 32 விழுக்காடு உயர்ந்தது.
அதன்மூலம் நிறுவனம் ஈட்டிய லாபம் மற்ற விமான நிறுவனங்களின் லாபத்தைவிட மிக அதிகம்.
வலுவான தேவை காரணமாக பங்கு விலை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிறகு, விமானப் பயணங்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், எஸ்ஐஏ ஆக அதிக வருடாந்தர நிகர வருமானத்தைப் பதிவுசெய்தது. அதனையடுத்து ஐந்தாண்டுகளில் ஆக அதிக அளவில் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
புளூம்பெர்க் உலக விமான நிறுவனங்களின் பட்டியலில், மார்ச் 13ஆம் தேதிக்குப் பிறகான காலகட்டத்திற்கு முதல் இடத்தைப் பிடித்துள்ளது எஸ்ஐஏ பங்குகளின் விலை.
அதன் பங்குகள் நேற்று முன்தினம் இரண்டு விழுக்காட்டுக்கும் மேல் விலை உயர்ந்தன.
பங்குகளின் விலை மேலும் ஆக்கபூர்வமான நிலையை எட்டக்கூடும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இன்னும் கிருமிப் பரவலுக்கு முந்தைய நிலையை எட்டவில்லை. இவ்வேளையில், விமானங்களில் இலவச இணையச் சேவை போன்ற நடவடிக்கைகள் எஸ்ஐஏ அதன் சந்தையைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் எனக் கருதப்படுகிறது.

