கொவிட்-19 தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறிய ஆடவர் ஒருவர் அதற்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் செலுத்தாமல் சுகாதார அமைச்சை ஏமாற்றியுள்ளார்.
இந்தக் குற்றத்திற்காக 29 வயதான லோவல் கால்வின் சிம் யூ ஜுன்னுக்கு 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி கொவிட்-19 தனிமைப்படுத்திக்கொள்ளும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அவர் தஞ்சோங் பகார் வட்டாரத்திலுள்ள அமரா சிங்கப்பூர் ஹோட்டல் அறையில் ஆகஸ்ட் 13 வரை தனிமையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டது.
ஆனால் அவர் அந்த ஆணைக்கு உட்படாமல், ஆகஸ்ட் 5ஆம் தேதி அந்த ஹோட்டலின் வேறு அறைக்கு கைப்பேசி மின்னேற்றி வாங்க சென்றுள்ளார். அந்த அறையில் இருந்தவரும் தனிமை உத்தரவில் இருந்துள்ளார்.
சிம் அவருடைய அறையை விட்டு வெளியேறி வேறு ஓர் அறையில் இருப்பதை அறிந்த ஹோட்டலின் விருந்தினர் சேவை மேலாளர் சுகாதார அமைச்சுக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் தொர்பில் அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி சுகாதார அமைச்சில் இருந்து சிம்முக்கு அவர் புரிந்த குற்றத்திற்காக $500 அபராதம் விதித்திருப்பதாக ஆணை வந்தது.
அவர் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி அந்த
அபராதத்தை தான் செலுத்தி விட்டதாகக் கூறி, போலி ஆவணம் ஒன்றை மின்னஞ்சலில் சுகாதார அமைச்சுக்கு அனுப்பினார்.
இது குறித்து 5 மாதத்திற்குப் பிறகு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
அவர் போதை மருந்து பழக்கம் உடையவர். 2021ஆம் ஆண்டுக்கும் 2026ஆம் ஆண்டுக்கும் இடையே அவர் காவல்துறையின் கட்டாய கண்காணிப்பு சிம் ஆணையின்கீழ் இருந்தார்.
அப்போது அவர் அங் மோ கியோ காவல்துறை தலைமையகம் சென்று ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அவர் அதை செய்யத் தவறியதால் அவரைக் காவல்துறை அவ்வாண்டு நவம்பர் மாதம் கைது செய்தது.
சிம் $20,000 பிணைத்தொகை செலுத்தி தற்போது வெளிவந்துள்ளார்.
ஜூன் மாதம் 30ஆம் தேதி சிம் யூ ஜுன் சிறை தண்டனையை மேற்கொள்ள நீதிமன்றத்தில் சரணடையப் போவதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

