புதிய தனியார் வீடுகள் விற்பனை அதிகரிப்பு

புதிய தனியார் வீடுகள் விற்பனை அதிகரிப்பு

1 mins read
ca978bed-b497-435e-9e39-060204f32232
-

சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து ஐந்­தா­வது மாத­மா­கப் புதிய தனி­யார் வீடு­க­ளின் விற்­பனை அதி­க­ரித்­து உள்­ளது. 12 மாதங்­களில் பதி­வான ஆக அதி­க­மான விற்­பனை இது.

எக்­சி­கி­யூட்­டிவ் கூட்­டு­ரிமை வீடு­க­ளைத் தவிர்த்து, கடந்த மே மாதம் சொத்து மேம்­பாட்­டா­ளர்­கள் 1,038 வீடு­களை விற்­பனை செய்­த­னர். சென்ற எப்­ரல் மாதம் விற்­ப­னை­யான 887 வீடு­க­ளைக் காட்­டி­லும் இது 17 விழுக்­காடு அதி­கம் என்று நக­ர மறுசீர­மைப்பு ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டின.

இருப்­பி­னும், ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த ஆண்டு மே மாதம் விற்­ப­னை­யான 1,355 வீடு­க­ளி­லி­ருந்து விற்­பனை 23.4% குறைந்­தது.

மொத்­தம் 1,595 வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­பட்­டன. அவை ஏப்­ரல் மாத எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் கிட்­டத்­தட்ட ஒரு மடங்கு அதி­கம்.