சிலேத்தார் விரைவுச்சாலையில் வாகனம் கவிழ்ந்தது, வெளியேறும் பாதை மூடல்

சிலேத்தார் விரைவுச்சாலையில் வாகனம் கவிழ்ந்தது, வெளியேறும் பாதை மூடல்

1 mins read
1d9bd8b0-fa35-45df-8fed-a1181a1a1814
-

சிலேத்­தார் விரை­வுச்­சா­லை­யின் (எஸ்­எல்ஈ) துணைச் சாலை­யில் சரக்கு வாக­னம் சறுக்கி விழுந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில் 44 வயது ஆட­வர் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

சம்­ப­வத்­தைத் தொடர்ந்து அந்­தத் துணைச்­சாலை மூடப்­பட்­டது.

சிலேத்­தார் விரை­வுச்­சாலை யிலி­ருந்து தீவு விரை­வுச் சாலையை நோக்கி புக்­கிட் தீமா விரை­வுச் சாலைக்­குச் செல்­லும் வழி மூடப்­பட்­ட­தாக மதி­யம் 1.21 மணிக்கு வெளி­யிட்ட ட்விட்­டர் பதி­வில் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.

ஆறு நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு அது வெளியிட்ட மற்­றொரு பதி­வில், உட்­லண்ட்ஸ் அவென்யூ 2 வெளியேறும் சாலைவரை அந்த விரை­வுச் சாலை­யில் வாகன நெரி­சல் ஏற்­பட்­டுள்­ள­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது.

இணை­யக் குழுக்­களில் பரவும் புகைப்­ப­டங்­கள், காணொ­ளிகளில், இரு­வ­ழிச் சாலை­யின் இடது பாதை­யில் ஒரு பச்சை நிற சரக்கு வாக­னம் வலது பக்­க­மாக கவிழ்ந்­தி­ருப்­ப­தை­யும், செந்நிற மண்ணும் கற்களும் வலது பக்க தடம் வரை பர­வி­யி­ருப்­ப­தையும் காட்­டு­கின்­றன.

விபத்து குறித்து பகல் 1.08 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தா­க காவல்­து­றை தெரிவித்தது.

மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­போது 44 வயது ஆட­வர் சுய­நி­னை­வு­டன் இருந்­த­தா­க காவல்துறை குறிப்பிட்டது.