நண்பரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டைவிட்டு வெளியேற முயன்றவருக்கு சிறை

2 mins read
a164acb5-fb27-48ea-ad76-260b391b4101
-

வாடகை மோச­டி­யில் பலரை ஏமாற்­றி­ய­தற்­காக கைது செய்­யப்­பட்ட பின்­னர், பிணை­யில் வெளி­வந்த 24 வயது பட்­டேல் தாவல்­கு­மார் சந்­து­பாய் தனது அறை நண்­ப­ரின் கட­வுச்­சீட்­டைப் பயன்­படுத்தி சிங்­கப்­பூரை விட்டு வெளி­யேற முயன்­றார்.

இந்­திய நாட்­ட­வ­ரான பட்­டேல் தாவல்­கு­மார் சந்­து­பாய்க்கு நேற்று 14 மாதம், 14 வார சிறை விதிக்­கப்­பட்­டது. கட­வுச்­சீட்டு சட்­டத்­தின்கீழ் ஒரு குற்­றம் உட்­பட ஐந்து குற்­றச்­சாட்­டு­களில் அவர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். மற்ற குற்­றச்­சாட்­டு­கள் வாடகை மோசடி தொடர்­பா­னவை.

தான் குடி­யி­ருக்­கும் வீட்­டில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஓர் அறை வாட­கைக்­குத் தரு­வ­தாக பட்­டேல், சிங்­கப்­பூ­ருக்கு படிக்க வந்த நான்கு பேரை ஏமாற்­றி­யுள்­ளார். அந்த வீட்­டில் எத்­தனை அறை­கள் இருந்­தன, எந்த வகை­யான வீடு என்று நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

2022 மே மாதம் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மி­ருந்­தும் $500 வாட­கையை வாங்­கிய பட்­டேல், வீட்­டின் வாட­கை­தா­ரர்­கள் பகிர்ந்து­ கொள்­ளும் மளி­கைப் பொருள்­களுக்­காக ஒரு­வ­ரி­ட­மி­ருந்­தும் கூடு­த­லாக $200 கேட்­டுள்­ளார். பணத்தை வாங்­கி­ய­தும் குறு­கிய பய­ணத்­திற்­காக மலே­சியா செல்­வ­தாக அந்த வீட்­டி­லி­ருந்து கிளம்­பிய பட்­டேலை பின்­னர் தொடர்பு­கொள்ள முடி­ய­வில்லை.

பட்­டேல் மாதாந்­திர வாட­கையை செலுத்­த­வில்லை என்­றும், பணம் செலுத்­து­வதை தாம­தப்­ப­டுத்த சாக்­குப்­போக்கு கூறி வரு­வ­தா­க­வும் கூறிய வீட்டு உரி­மை­யா­ளர், பாதிக்­கப்­பட்­ட­வர்­களை வீட்டை விட்டு வெளி­யே­றும்­படி கோரி­னார்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் படே­லுக்கு எதி­ராக காவல்­து­றை­யில் புகார் அளித்­த­னர். மே 29 அன்று சிங்­கப்­பூ­ரில் இருந்து இந்­தி­யா­வுக்­குச் செல்ல முயன்­ற­போது பட்­டேல் சாங்கி விமான நிலை­யத்­தில் கைது செய்­யப்­பட்­டார்.

அவர் தனது கட­வுச்­சீட்டை ஒப்­ப­டைத்து ஜூன் 3ஆம் தேதி பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார், நீதி­மன்ற அனு­ம­தி­யின்றி சிங்­கப்­பூ­ரை­விட்டு வெளியே பய­ணம் செய்­யக்­கூ­டாது என்­பதை அறிந்­தி­ருந்­தார்.

2023 மார்ச்­சில், பட்­டே­லு­டன் தங்­கி­யி­ருப்­ப­வர் கைப்­பேசி வாங்­கு­வ­தற்­காக தனது கட­வுச்­சீட்டை பட்­டே­லி­டம் கொடுத்­தி­ருந்­தார்.

மார்ச் 20ஆம் தேதி நண்­ப­ரின் கட­வுச்­சீட்­டைப் பயன்­ப­டுத்தி, துவாஸ் சோத­னைச் சாவடி வழி­யாக நாட்­டை­விட்டு வெளி­யேற முயற்சி செய்­துள்­ளார்.

ஆனால் அவ­ரது முகம், கரு­விழி, கைரே­கைப் பதி­வு­கள் உண்­மை­யான கட­வுச்­சீட்டு வைத்­தி­ருப்­ப­வ­ரு­டன் பொருந்­த­வில்லை. குடி­நு­ழைவு அதி­காரி அவ­ரி­டம் விவ­ரங்­க­ளைக் கேட்­ட­போது, ​பட்­டேல் தனது நண்­ப­ரின் விவ­ரங்­க­ளைச் சொன்­னார்.

மேலும் விசா­ரித்­த­போது, ​​நண்­ப­ரின் மாண­வர் அனு­மதி அட்­டை­யின் மின்­னி­லக்க நகலை வழங்­கி­னார்.

அதி­கா­ரி­கள் பின்­னர் பட்­டே­லின் கைப்­பே­சி­யில் அழிக்­கப்­பட்ட அவ­ரது சொந்த கட­வுச்­சீட்­டின் புகைப்­ப­டத்தை கண்­டு­பி­டித்­ததை அடுத்து அவர் கைது செய்­யப்­பட்­டார்.