அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிரிவினை தென்கிழக்காசியாவிற்கு சாதகமாக இருக்காது: அமைச்சர்

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிரிவினை தென்கிழக்காசியாவிற்கு சாதகமாக இருக்காது: அமைச்சர்

2 mins read
2f356055-beae-4da8-aef4-f6f281f49354
-

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் பல­த­ரப்பு­களு­ட­னும் நட்பு வட்­டங்­களை உரு­வாக்க சிங்­கப்­பூர் விரும்­பு­வதாக வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கூறி­யி­ருக்­கி­றார்.

அமெ­ரிக்­கா­விற்­கும் சீனா­விற்­கும் இடை­யி­லான ஆதிக்­கப் போரில் இவ்­வட்­டார நாடு­கள் எந்­தத் தரப்பை ஆத­ரிப்­பது என்று முடி­வெ­டுக்க வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­ப­டு­வதை சிங்­கப்­பூர் விரும்­ப­வில்லை என்­றார் அவர்.

அமெ­ரிக்­கா­விற்கு அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள டாக்­டர் பால­கி­ருஷ்­ணன், வாஷிங்­ட­னில் வெளி­யு­ற­வுக் கொள்கை சார்ந்த வல்­லு­நர்­களிடையே உரை ஆற்­றி­னார்.

"அமெ­ரிக்கா, சீனா, ஐரோப்பா ஆகி­ய­வற்­றுக்கு தென்­கி­ழக்­கா­சி­யா­வின் அமைதி, வளப்­பம், மேம்­பாடு ஆகிய அம்­சங்­களில் பங்­க­ளிக்க வாய்ப்­ப­ளிக்க விரும்­பு­கிறோம். இதன்­மூ­லம், அதி­கா­ரச் சம­நி­லையை எட்ட முடி­யும் என்று கரு­து­கி­றோம்," என்­றார் அவர்.

அமெ­ரிக்­கா­விற்­கும் சீனா­விற்­கும் இடை­யில் போட்­டித்­தன்மை தீவி­ர­ம­டைந்­துள்ள நிலை­யில் அவர் அவ்­வாறு கருத்­து­ரைத்­துள்­ளார். இரு­த­ரப்­புக்­கு­மி­டை­யி­லான பதற்­றங்­க­ளால் நல்­லு­ற­வைக் கட்­டிக்­காப்­ப­தில் அவை சிர­மத்தை எதிர்­நோக்­கு­கின்­றன.

புதிய உலக ஒழுங்­கு­மு­றை­யில், வல்­ல­ர­சாக அமெ­ரிக்கா மட்­டுமே கோலோச்­சிய நிலை மாறி சீனா, இந்­தியா போன்ற நாடு­க­ளின் வளர்ச்­சி­யால் பன்­முகத்­தன்மை அதி­க­ரிப்­பதை அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

பல­த­ரப்­புக் கட்­ட­மைப்­பு­களும் விதி­மு­றை­களும் தேவை என்­ப­தை­யும் காலத்­துக்­கேற்ப அவற்­றில் மாற்­றம் கொண்­டு­வ­ரு­வது அவ­சி­யம் என்­ப­தை­யும் அவர் எடுத்­து­ரைத்­தார்.

இவ்­வார இறு­தி­யில் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன் சீனா செல்­ல­வி­ருப்­பது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்த டாக்­டர் பால­கி­ருஷ்­ணன், அத்­த­கைய நேரடி சந்­திப்பு­கள் பதற்­றத்­தைத் தணிக்க உத­வும் என்று குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யி­லான வலு­வான உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தும் பல்­வேறு துறை­களில் இரு­த­ரப்பு உறவை ஆழப்­ப­டுத்­து­வ­தும் அவ­ரது அமெ­ரிக்­கப் பய­ணத்­தின் நோக்­கம் என்று வெளி­யு­றவு அமைச்சு அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

தமது அமெ­ரிக்­கப் பய­ணத்­தின் ஓர் அங்­க­மாக, நாளை மறு­நாள் நியூ­யார்க்­கில் நடை­பெ­றும் ஐக்­கிய நாட்டு நிறு­வ­னக் கூட்­டத்­தில் கடல்­வாழ் பல்­லு­யி­ரி­கள் பற்­றிய சிங்­கப்­பூ­ரின் தேசிய அறிக்­கையை வெளி­யி­டு­வார் என்று கூறப்­பட்­டது.