கத்திக் குத்து; 56 வயது ஆடவர் கைதானார்

1 mins read
ea6dd729-832a-4795-8213-90fe80a73d05
-

தெம்­ப­னி­சில் உள்ள உண­வுக் கடை ஒன்­றில் 57 வயது ஆட­வரை வியா­ழக்­கி­ழமை கத்­தி­யால் குத்­தி­ய­தா­கக் கூறப்­படும் 56 வயது ஆட­வர் ஒரு­வர் கைதானார்.

ஆபத்­தான ஆயு­தத்­தைக் கொண்டு வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­ததை ஒட்டி அவர் கைது செய்­யப்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

புளோக் 513 தெம்­ப­னிஸ் சென்ட்­ரல் 1ல் பிற்­ப­கல் 12.40 மணி­ய­ள­வில் உதவி கேட்டு தனக்கு அழைப்பு வந்­த­தாக காவல்­துறை கூறி­யது.

அந்­தச் சம்­ப­வம் பற்றி கூறிய யூ-டேஸ்ட் உண­வ­கத்­தில் கோழிச்­சோறு விற்­கும் திரு ஸ்கை வூ, 43, என்­ப­வர், தான் நண்­ப­கல் வாக்­கில் காப்பி குடித்­துக்­கொண்டு இருந்த ஆட­வர்­கள் இரு­வர் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

"அவர்­கள் இரு­வ­ரும் எழுந்து நின்று ஒரு­வரை ஒரு­வர் திட்டத் தொடங்­கி­னர். அவர்­களில் ஒருவர் தமது பையி­லி­ருந்து மடக்­குக் கத்­தியை எடுத்து மற்­றோர் ஆட­வ­ரி­டம் காட்­டி­னார்," என்று திரு வூ சொன்­னார்.

கத்­தி வைத்­தி­ருந்த ஆட­வர், மற்­றோர் ஆட­வ­ரைக் கீழே தள்ளி­விட்டு அவ­ரைப் பல­முறை குத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"பாதிக்­கப்­பட்­ட­வர் எழுந்து நின்று, அந்த ஆட­வரை அடிக்க அங்­கி­ருந்த நாற்­கா­லியை எடுத்­தார். ஆனால், அவர் தடு­மா­றி­னார்," என்­றும் திரு வூ கூறி­னார்.

காவல்­துறை அதி­கா­ரி­கள் வரு­கின்­ற­னர் என்று திரு வூ சத்­த­மிட்ட பிறகு சந்­தேக ஆட­வர் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­னார்.

மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு­ செல்­லப்­பட்­ட­போது அந்த ஆட­வர் பாதி சுய­நி­னை­வு­டன் இருந்­த­தா­கக் காவல்­துறை கூறி­யது.