புக்கிட் பாத்தோக் வீவக வீடு ஒன்றில் நேற்று காலை நிகழ்ந்த தீச்சம்பவத்தில் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 70 குடியிருப்பாளர்கள் அந்தக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சீன நாளிதழான லியன்ஹ சாவ் பாவில் வெளிவந்த புகைப்படங்களில், சம்பவ இடத்தில் மூன்று தீயணைப்பு வாகனங்கள், இரண்டு அவசர மருத்துவ வாகனங்கள், ஒரு காவல்துறை வாகனம் ஆகியவை தெரிந்தன.
இதுபற்றிக் கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, புக்கிட் பாத்தோக் அவென்யூ 5ல் உள்ள புளோக் 392ல் தீ ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3.45 மணிக் குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது.
வீட்டின் மைய அறையில் இருந்த பொருள்களால் தீ மூண்டதாகவும் நீர் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது. தீச்சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

