தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசியதின அணிவகுப்பில் புதுமை பாணியில் மிளிரும் முழுமை தற்காப்பு; 6 வண்ண மிதவைகள்

2 mins read
ed53592b-67d9-4ca0-9072-f6643f2efec3
-
multi-img1 of 2

சபிதா ஜெய­கு­மார்

சிங்­கப்­பூ­ரின் 58வது பிறந்­த­நாளைப் பிரம்­மாண்­ட­மா­கக் கொண்­டாட நடைபெற­வி­ருக்­கும் தேசிய தின அணி­வ­குப்­பில் இடம்­பெ­றும் ஒரு புதிய அங்கம் முழு­மைத் தற்­காப்பைப் புதுப்­பொலிவு, கேளிக்கை, ஈடு­பாட்டு உணர்வு ஆகி­ய­வற்­றைப் புலப்­படுத்­தும் வகை­யில் எடுத்துக் காட்டும்.

பெரிய அள­வி­லான ஆறு வண்ண மித­வை­கள், வீர வணக்­கம் செலுத்­து­வது இரண்­டும் முத்­தாய்ப்­பாக அணி­வ­குப்­பில் இடம்­பெ­றும் என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் நேற்றுத் தெரி­வித்­த­னர்.

முழு­மைத் தற்­காப்­பின் ஒரு தூணான சமூ­கத் தற்­காப்பைக் குறிக்­கும் குடை போன்ற வழக்­க­மான பொருள் மூலம் ஒவ்­வொரு மித­வை­யும் ஒவ்வொரு தூணைப் பிரதிபலிக்கும்.

முழு­மைத் தற்­காப்பு அணி­வகுப்­பின் புத்­தாக்க இயக்­கு­நரான திரு ஹுவாங் ஜின்­ஸி­யாங், 34, பல்­வேறு தலை­மு­றை­க­ளைச் சேர்ந்த மக்­க­ளுக்­கும் முழு­மைத் தற்­காப்­பின் கருப்­பொ­ருளை விளக்க எளி­மை­யான வழியைக் காண விரும்­பியதாகக்­ கூறி­னார்.

"முழு­மைத் தற்­காப்­பு­டன் ஒவ்­வொ­ரு­வ­ரும் தொடர்­பு­கொள்ள லாம். அதில் ஈடு­பாட்டு உணர்­வு­டன் திகழ முடி­யும் என்­பதைப் புலப்­ப­டுத்­தக்­கூ­டிய அணு­கு­முறையை விரும்­பி­னோம்.

"ஆகை­யால், மிதவைத் தற்காப்பு அங்­கத்தைப் புதுப்­பொலி­வு­டன் சம­கா­லத்­திற்கு ஏற்ற ஒன்­றாக, கேளிக்­கை­யு­டன் கூடி­ய­தாக அமைக்க முடிவு செய்­தோம். இத­னால் மக்­கள் அதைப் பற்றிப் பேசு­வ­தற்கு வழி­பி­றக்­கும்," என்று நேற்று நடந்த ஊடக நிகழ்ச்­சி­யில் அவர் விளக்­கி­னார்.

முழு­மைத் தற்­காப்பு மித­வை­கள் பேசும்­பொ­ரு­ளாக இருக்­கும் என்று தான் நம்­பு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

முழு­மைத் தற்­காப்பு அணி­வகுப்­பில் வழக்­க­மாக இடம்­பெ­றக்­கூ­டிய சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள், சிங்­கப்­பூர் காவல் படை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­ன­ரின் அணி­வ­குப்பு இந்த ஆண்­டும் இடம்­பெ­றும்.

இவற்றோடு, முழு­மைத் தற்­காப்­பின் இதர தூண்­க­ளுக்­கும் பரந்த அள­வில் முக்­கி­யத்­து­வம் கொடுக்க தான் விரும்­பி­ய­தாக ஏற்­பாட்­டுக் குழு தெரி­வித்­தது.

முழு­மைத் தற்­காப்பு அணி­வ­குப்­பில் மொத்­தம் 650 பேர் பங்­கெ­டுப்­பார்­கள்.

பெரிய அள­வி­லான முழு­மைத் தற்­காப்­புக் கொடியைப் பறக்­க­விடு­வது, கடந்த 50 ஆண்டு காலத்­தில் முழு­மைத் தற்­காப்­புக்குத் தொண்­டாற்றி உள்ளோருக்கு நன்றி கூறி வீர வணக்­கம் செலுத்­து­வது ஆகி­ய­வை­யும் இடம்­பெ­றும்.

இந்த ஆண்­டின் தேசிய தின அணி­வ­குப்பு ஆகஸ்ட் 9ஆம் தேதி பாடாங் திட­லில் நடக்­கிறது.

அணி­வ­குப்பு தள­பதி லெப்­டி­னண்ட் கர்­னல் ரகு­மா­ரன் தேவேந்­தி­ரன், 38, தேசிய தின அணி­வகுப்பு 2023ஐ வழி நடத்­து­கிறார். மாஸ்­டர் வாரண்ட் அதி­காரி பாண்­டி­கு­மா­ரன் ஆர்த்­தி­யப்­பன், 45. அணி வகுப்பு படைப்­பி­ரிவு சார்­ஜன்ட் மேஜ­ராக இருப்­பார்.

"2019க்குப் பிறகு கட்­டுப்­பாடு­கள் இன்றி "நமது தேசத்தை ஒன்­றி­ணைந்து காப்­போம்" எனும் கருப்­பொ­ரு­ளு­டன் நடக்க உள்ள இவ்­வாண்டு அணி­வ­குப்­பில் அணி­வ­குத்­துச் செல்­லும் 34 படைப்­பி­ரி­வு­களில் 1700க்கும் மேற்­பட்­டோர் பங்­கெ­டுப்பர்," என்று அணி­வ­குப்பு தலை­வர் கர்­னல் லிம் யு சிங் குறிப்­பிட்­டார்.