தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருட்டுச் செயலி மோசடி: $100,000 சேமநிதி சேமிப்பு பறிபோனது

2 mins read
1fad0660-7b33-489f-8f14-dbcef950c415
-

ஆண்­ட­ராய்ட் சாத­னம் பயன்­ப­டுத்­தும் இரண்டு பேர் இந்த மாதம் திருட்டுச் செயலி தொடர்­பான மோச­டி­களில் சிக்கி $99,800 மத்­திய சேமி­நி­திச் சேமிப்பை இழந்து விட்­ட­னர்.

அந்த அப்­பா­வி­கள், ஃபேஸ்புக் உள்­ளிட்ட சமூக ஊட­கத்தளங்­களில் கட­லு­ணவு போன்ற மளிகைப்­பொ­ருள்­கள் விளம்­பரங் களைப் பார்த்து ஏமாந்­து­விட்­ட­தாக காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

விளம்­ப­ரங்­க­ளைப் பார்த்­த­தும் அவர்­கள் தங்­கள் சமூக ஊடகத்­த­ளங்­கள் மூல­மாக அல்லது வாட்ஸ்­அப் மூலமாக விளம்­பர நிறு­வ­னங்­க­ளு­டன் தொடர்­பு­கொண்­ட­னர்.

'மளி­கைப் பொருள்­க­ளைப் பெற்­றுக்கொண்டு பணத்­தைச் செலுத்­தத் தோதாக இந்­தச் செய­லியை ஆண்­ட்ராய்ட் சாத­னங்­களில் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ளுங்­கள்' என்று சொல்லி நிறு­வ­னங்­கள் அவர்களுக்கு முக­வரி (URL) ஒன்றை அனுப்­பின.

அந்­தச் செய­லியை மூன்­றாம் தரப்பு அல்­லது இணை­யத் தொடர்­பில் இருந்து பதி­வி­றக்­கம் செய்­ய­லாம் என்று அந்த அப்­பாவி­க­ளி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­த­கைய செய­லி­யைப் பதி வி­றக்­கம் செய்­யும்­போது திருட்டுச் செய­லி­யும் கைப்­பேசிக்­குள் அல்­லது கணி­னிக்­குள் புகுந்­து­வி­டும்.

இது அப்­பா­வி­க­ளுக்­குத் தெரி­யாது. அந்­தத் திருட்டு செயலி மூலம் மோச­டிப் பேர்­வ­ழி­கள் எங்­கேயோ இருந்­து­கொண்டு அப்­பா­வி­க­ளின் சாத­னங்­களில் இருந்து அவர்­களின் ரக­சிய தக­வல்­க­ளைத் திருடிவிடு­வார்­கள்.

அதோடு நின்­று­வி­டா­மல் அப்பா­வி­க­ளு­டன் தொடர்­பு­கொண்டு ஒரு கணக்­கைத் தொடங்க வேண்­டும் என்று சொல்லி சிங்­பாஸ் விவ­ரங்­க­ளை­யும் சில நேரங்­களில் மோச­டிப்­பேர்­வ­ழி­கள் கேட்­ப­துண்டு.

அதை நம்பி செயல்­படும் அப்பா­வி­கள், தங்­கள் விவ­ரங்­களைப் பயன்­ப­டுத்தி அந்­தத் திருட்­டுச் செய­லிக்­குள்­ளேயே பணத்­தைச் செலுத்­தும் நிலை ஏற்­படும். அப்போது பயன்­ப­டுத்­தப்­படும் விவ­ரங்­களை அந்­தச் செயலி திரு­டி­வி­டும்.

அதைக்­கொண்டு மோசடிப் பேர்­வ­ழி­கள் தொலை­வில் இருந்த­ப­டியே அப்­பா­வி­க­ளின் மத்­திய சேம­நி­திக் கணக்­குக்­குள்­ சென்று 'பேநவ்' வழி பணத்தை எடுக்கக் கோரு­வார்­கள்.

சேம­நி­திப்­ப­ணம் அப்­பா­வி­களின் வங்­கிக் கணக்­கில் வரவு வைக்­கப்­பட்­ட­தும் மோச­டிக்­கா­ரர்­கள் பேநவ் மூலம் பணத்தை எடுத்­து­வி­டு­வார்­கள்.

தங்கள் வங்­கிக் கணக்­கைப் பார்க்­கும்­போ­து­தான் தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டது அப்­பா­வி­க­ளுக்­குத் தெரி­ய­வ­ரும்.

ஆகை­யால் செய­லி­க­ளைப் பதி­விறக்­கம் செய்­யும்­போது மிக­வும் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருந்து­கொள்­ளும்­படி காவல்­துறை மக்­க­ளுக்கு ஆலோ­சனை கூறி­யது.