புதிய நிதியாதரவுத் திட்டத்தால் பலன்பெறும் தண்ணீர் பரிசோதனை முறை

2 mins read
87986852-af56-48d6-a026-d223a1d6403a
-

ஆய்­வுக்­கூ­டத்­தில் வளர்க்­கப்­படும் மனித உயி­ர­ணுக்­கள் சம்­பந்­தப்­பட்ட புதிய பரி­சோ­தனை முறை மூலம், விரை­வில் விஞ்­ஞா­னி­களால் குடி­நீ­ரில் ரசா­யன பொருள்­களைக் கண்­ட­றிய முடி­யும்.

பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் பரி­சோ­தனை ஆற்­ற­லில் இந்­தப் புதிய முறை சேர்க்­கப்­ப­ட­லாம்.

சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட தண்­ணீ­ரில் அபா­ய­க­ர­மான பொருள்­க­ளைக் கண்­ட­றி­யக்­கூ­டிய ஆரம்­ப­கட்ட எச்­ச­ரிக்கை முறை­யாக இது செயல்­ப­ட­லாம்.

பொது­வாக, தண்­ணீ­ரில் பல­த­ரப்­பட்ட மாசு பொருள்­களும் ரசா­யன பொருள்­களும் இருக்­கும். அவை ஒவ்­வொன்­றாக பரி­சோ­திக்க நேர­மும் வளங்­களும் தேவைப்­படும் என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (என்­டியு) நன்­யாங் சுற்­றுப்­புற, தண்­ணீர் ஆய்­வுக் கழக இயக்­கு­ந­ரான பேரா­சி­ரி­யர் ஷேன் ஸ்னை­டர் தெரி­வித்­தார்.

நுரை­யீ­ரல், கல்­லீ­ரல் உயி­ர் அணுக்­கள் போன்ற மனித உயிர் அணுக்­க­ளு­டன் இந்த வெவ்­வேறு பொருள்­களும் எவ்­வாறு செயல்­படு­கின்­றன என்­பதை ஆராய்­வதன் மூலம், மனி­தர்­க­ளுக்கு கெடு­தி­யா­ன­வற்றை விஞ்­ஞா­னி­கள் அடை­யா­ளம் காண முடி­யும்.

தண்­ணீ­ரில் குறிப்­பிட்ட சில­வகை ரசா­யன பொருள்­க­ளைக் கூடு­தல் பரி­சோ­த­னைக்கு பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் உட்படுத்த இந்­தப் பரி­சோ­தனை முறை உத­வக்­கூ­டும் என்று கழகம் குறிப்­பிட்­டது.

தான் ஏற்­கெ­னவே ஆண்­டு­தோ­றும் ஏறத்­தாழ 500,000 தண்ணீர் தர பரி­சோ­த­னை­க­ளைச் செய்து வந்­துள்­ள­தாக கழ­கம் சொன்­னது.

$92 மில்­லி­யன் மதிக்­கத்­தக்க நிதி­யா­த­ர­வுத் திட்­டத்­தால் பலன்­பெ­றும் தண்­ணீர் ஆய்­வுத் திட்டங்­களில் இது­வும் ஒன்று.

கடல்­நீ­ரைக் குடி­நீ­ராக்­கு­வ­தற்­கான எரி­சக்­திப் பயன்­பாட்­டைக் குறைக்க கழ­கம் இலக்கு கொண்டுள்­ளது. தற்­போது அதன் பயன்­பாடு, ஒரு கன மீட்­ட­ருக்கு 3.5 கிலோ­வாட் மணி­யாக உள்ளது. 2025க்குள் இதை ஒரு கன மீட்­ட­ருக்கு 2 கிலோ­வாட் மணிக்குக்­கீழ் குறைப்­பது அதன் இலக்கு.