ஜூன் 29ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்

ஜூன் 29ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்

1 mins read
c4304f68-63e9-49a1-a481-16f36a22613c
-

சிங்­கப்­பூ­ரில் உள்ள முஸ்­லிம்­கள் இவ்­வாண்டு ஹஜ்­ஜுப் பெரு­நாளை ஜூன் மாதம் 29ஆம் தேதி கொண்­டாட உள்­ள­தாக முஃப்தி நஸி­ரு­தீன் முகம்­மது நசிர் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை சூரி­யன் மறைந்­த­போது பிறை நிலா தென்­ப­டா­த­தால், துல்­ஜஹ் மாதத்­தின் தொடக்­கம் நாளை செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெ­று­வ­தைக் குறிப்­ப­தாக முஃப்தி கூறி­னார்.

துல்­ஹஜ் மாதத்­தின் 10வது நாளில் ஹஜ்­ஜுப் பெரு­நாள் கொண்­டா­டப்­ப­டு­கிறது. சவூதி அரே­பி­யா­வின் மக்­காஹ் நக­ருக்கு புனித ஹஜ் யாத்­தி­ரை­யின் முடிவை அது குறிக்­கிறது.

"தொடர்ந்து நல்ல செயல்­களை மேற்­கொள்­வ­தோடு ஹஜ் யாத்­திரை மேற்­கொண்­டுள்­ளோ­ரின் நல­னுக்­காக துஆ செய்து இம்­மா­தத்தை வர­வேற்­போம்," என்று முஃப்தி குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த சுமார் 900 முஸ்­லிம்­கள் இவ்­வாண்டு ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­கின்­ற­னர்.

2022ல் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஹஜ் யாத்­திரை செல்ல சிங்­கப்­பூ­ருக்கு தொடக்­கத்­தில் 407 இடங்­கள் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால், இந்த எண்­ணிக்கை பின்­னர் 900ஆக உயர்த்­தப்­பட்­டது. கொவிட்-19க்கு முந்தைய எண்ணிக்கையுடன் இது இணையானது.