மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 312 பேரிடம் விசாரணை

சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 312 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் 16 வயதுக்கும் 83 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். இரண்டு வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

ஜூன் 9க்கும் 22க்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 203 ஆண்களும் 109 பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.

1,200க்கு மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதன் தொடர்பிலான விசாரணையில் அவர்கள் உதவி வருகின்றனர். மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் $6 மில்லியனுக்குமேல் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடன் மோசடிகள், இணையக் காதல் மோசடிகள், போலி நட்பு அழைப்புகள் தொடர்பான மோசடிகள், அரசாங்க அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்த மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடிகள், மின்வர்த்தக மோசடிகள் போன்றவை அவற்றில் அடங்கும்.

ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமம் இல்லாமல் கட்டணச் சேவை வழங்குதல் ஆகியவை தொடர்பில் 312 பேரும் விசாரிக்கப்படுகின்றனர்.

ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $500,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

உரிமம் இல்லாமல் கட்டணச் சேவை நடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ $125,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!