புதிய உத்தேச சட்டம் சிரமமானது; பேருந்து நிறுவனங்கள் கருத்து

பயணிகள் பற்றிய தகவல்களைக் குடிநுழைவு சோனைச்சாவடி ஆணையத்திடம் முன்னதாகவே தெரியப்படுத்தும் ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது சிரமம் என்றும் அதனால் தொழில் பாதிக்கும் என்றும் கடற்பாலத்தைக் கடந்து சேவையாற்றும் பேருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அந்த உத்தேச சட்டம், குடிநுழைவு (திருத்த) மசோதாவின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் முதல்வாசிப்புக்கு புதன்கிழமை தாக்கலானது.

இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ அதைத் தாக்கல் செய்தார்.

அதை நாடாளுமன்றம் நிறைவேற்றினால், தங்கள் வாகனங்கள் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளைச் சென்றடைவதற்கு முன்னதாகவே பயணிகள் பற்றிய தகவல்களை ஆணையத்திடம் பேருந்து நிறுவனங்கள் தாக்கல் செய்யவேண்டி இருக்கும்.

பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் போன்ற விரும்பத்தகாத பயணிகளை இந்தப் புதிய ஏற்பாட்டின் மூலம் தடுத்துவிடலாம் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த மசோதாவில் வேறு ஓர் திட்டமும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

‘பேருந்தில் ஏற தடை உத்தரவு’ என்பது அந்தத் திட்டம். இது நிறைவேறினால் விரும்பத்தகாத பயணிகளைப் பேருந்தில் ஏற்றிக்கொள்ளக்கூடாது என்று தடைவிதிக்கும் உத்தரவை பேருந்து நிறுவனங்களுக்கு ஆணையம் பிறப்பிக்கக் கூடும். சட்டத்தை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

விமான நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பயணிகள் பற்றிய தகவல்களை முன்னதாகவே குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் இப்போது பெற்று வருகிறது.

ஆனால் போக்குவரத்து நிறுவனங்கள் அனைத்திற்குமே இந்த ஏற்பாடு புதிதான ஒன்றாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!