ஜோகூரில் விபத்து: சிங்கப்பூரர் மரணம்

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இஸ்கந்தர் புத்ரியில் கேஎம்9.5 இரண்டாவது இணைப்பில் லாரி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதை அடுத்து சிங்கப்பூரரான ஆடவர் ஒருவர் மாண்டார்.

அவருடன் மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் பயணம் செய்தவர் காயம் அடைந்தார்.

அந்த 23 வயது ஆடவர் வெள்ளிக்கிழமையன்று தனது 22 வயது காதலியுடன் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றதாகவும் இரவு 10.30 மணி அளவில் விபத்து நிகழ்ந்ததாகவும் இஸ்கந்தர் புத்ரி காவல்துறை உதவி ஆணையர் ரஹ்மட் ஆஃப்ரின் தெரிவித்தார்.

“விபத்தில் சிக்கிய இருவரும் சிங்கப்பூரர்கள். அவர்கள் ஜோகூர் பாருவுக்குச் சென்றுகொண்டு இருந்தார்கள். முன்பக்கம் சென்றுகொண்டு இருந்த லாரியின் இடது பக்கத்தில் மோட்டார்சைக்கிள் மோதிவிட்டதாக முதல்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

“காயம் அடைந்த மாதுக்குச் சனிக்கிழமை சுயநினைவு வந்தது. சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்க அந்த மாதின் உறவினர்கள் அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட லாரியை 49 வயது ஆடவர் ஓட்டிவந்ததாகவும் அந்த வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் உதவி ஆணையர் கூறினார். இந்த விபத்து பற்றி புலன்விசாரணை நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!