$6,700க்கு மேல் மதிப்புடைய பால்மாவு திருடிய ஆடவருக்குச் சிறை

பேரங்காடிகளிலிருந்து பலமுறை பால்மாவு திருடிய ஆடவருக்குத் திங்கட்கிழமை 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதே குற்றத்திற்காக அவருக்குப் பலமுறை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் அதனைத் தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த 38 வயது ஆடவரின் பெயர் ஜேம்ஸ் ஹோ. 2021ஆம் ஆண்டு இரண்டு மாதங்களில் $6,700க்கும் அதிக மதிப்புடைய 70 பால்மாவுக் கலன்களை 16 வெவ்வேறு பேரங்காடிகளிலிருந்து திருடியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் சிறையிலிருந்து விடுதலையான இரண்டு மாதங்களில் மீண்டும் குற்றச்செயல் புரிந்ததால் அவருக்குக் கூடுதலாக 233 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜேம்ஸ் தன்மீது சுமத்தப்பட்ட ஐந்து திருட்டுக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்படுமுன் அவர்மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!