ஜூலை 25ஆம் தேதி முதல் காணாமல் போன 13 வயது ராதிகா மோகனராஜா கண்டுபிடிக்கப்பட்டார் என்று சிங்கப்பூர் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அந்தப் பெண்ணைப் பற்றி அறிந்தவர்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று சிங்கப்பூர் காவல்துறை ஆகஸ்ட் 7ஆம் தேதி கேட்டுக்கொண்டது. அவர் கடைசியாக தோ பாயோ லோரோங் 8ல் காணப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

