உற்பத்தி ஆலைகள், கட்டுமானம், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் போன்ற கரிம பயன்பாடு அதிகம் உள்ள தொழில் துறைகளுக்கு அதிக கரிம ஊக்கப் புள்ளிகளை வழங்கும் விதமாக சிங்கப்பூரில் புதிய கரிம பதிவேடு ஒன்று அமைய உள்ளது.
‘த ஏஷியா கார்பன் இன்ஸ்டிடியூட்’ எனப் பெயர்கொண்ட இந்த அரசு சாரா அமைப்பு, கரிம பயன்பாட்டை குறைவாகப் பயன்படுத்துவது அல்லது அதை முற்றிலும் அகற்றுவதாகக் கூறப்படும் திட்டங்களின் நம்பகத்தன்மையை ஆராயும். பின்னர், அதற்கேற்ப அது சான்றிதழ் வழங்கி அந்தத் திட்டங்கள் தொடர்பில் ஊக்கப் புள்ளிகள் வழங்க ஏதுவாக அவை தொண்டூழிய அடிப்படையில் இயங்கும் கரிம சந்தைப் பிரிவில் பதிவு செய்யப்படும். பிறகு, நிறுவனங்கள் இந்த கரிம ஊக்கப் புள்ளிகளை கரிம பரிவர்த்தனையில் ரொக்கமாக மாற்றிக்கொள்ளலாம்.