சிங்கப்பூரில் அரிதாகக் காணப்படும் மலாயன் டாப்பிர் எனப்படும் ஒரு வகை காட்டுப் பன்றி பெரியதும் கொடியதுமானது என்ற விலங்குநல ஆராய்ச்சி, விழிப்புணர்வு சங்கம் தெரிவித்து உள்ளது.
தும்பிப் பன்றி என பொதுவாக அழைக்கப்படும் இதன் அருகில் செல்ல வேண்டாம் என சங்கத்தின் தலைமை நிர்வாகி கலைவாணன் பாலகிருஷ்ணன் பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார்.
“அந்த வகைப் பன்றியைக் கண்டால் அதனிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். அதன் அருகில் ஓடவோ சைக்கிளில் செல்லவோ வேண்டாம்,” என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூரில் மலாயன் டாப்பிர் பன்றி காணப்படுவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் அதனை இங்கு காணமுடிந்தது.
பூங்கா இணைப்பில் டாப்பிர் பன்றி ஓடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சைக்கிளோட்டிகளுக்கான ஃபேஸ்புக் பதிவில் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையைச் சங்கம் விடுத்துள்ளது.