புதிய வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்தில் கூட்ட நெரிசல் இல்லையென உறுதிசெய்ய கூடுதல் அவகாசம் தேவை: மனிதவள அமைச்சு

சிங்கப்பூருக்குப் புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்களை, தங்குவிடுதிகளுக்கு வெளியே வேறு இடங்களில் தங்கவைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

அவர்கள் தங்கும் இடங்களில் கூட்ட நெரிசல் இல்லை என்பதையும் தேவையான ஆவணங்கள் அனைத்தும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்ய, கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதனால் இத்தகைய ஒப்புதலை வழங்குவதற்கு ஆறு வார காலம் பிடிக்கிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு அளித்த பதிலில் மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகள், கட்டுமானத் தளங்களில் அமைக்கப்படும் தற்காலிகத் தங்குமிடங்கள் போன்றவற்றில் தங்குவோருக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் அனுமதி கிடைத்துவிடுகிறது.

கட்டுமானம், கடல்துறை போன்ற துறைகளில் பணியாற்ற சிங்கப்பூருக்கு வரும் ஊழியர்களின் தங்குமிடத் தகவல்களை முதலாளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று திங்கட்கிழமை அமைச்சு அறிவித்திருந்தது.

இப்புதிய விதிமுறை இம்மாதம் 19ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஆனால் மலேசியக் குடியுரிமை வைத்திருப்போருக்கு இது பொருந்தாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!