மூதாட்டி படுகாயம்; கவனக்குறைவாக காரை ஓட்டிய தாதிக்கு அபராதம்

கவனக்குறைவாக காரை ஓட்டிய தாதியர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சைக்கிளில் வந்த முதியவர் படுகாயம் அடைந்தார்.

துணை இயக்குநர் தாதியராக பணியாற்றும் பே சுவே செங், 55, காரை கவனமாக ஓட்டாமல் முதியவருக்கு காயம் விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். இவருக்கு 3,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அடுத்த ஐந்து ஆண்டுகள் அனைத்து வகை வாகனங்களை ஓட்டவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

2022 நவம்பர் 1ஆம் தேதி பிற்பகல் ஒரு மணியளவில் புளோக் 649ஏ உட்லண்ட்ஸ் ரிங் ரோட்டிலிருந்து சாலை சந்திப்பை நோக்கிச் செல்லும் துணைச் சாலையில் விபத்து நிகழ்ந்தது. அப்போது பே காரை சரியாகக் கவனிக்காமல் ஓட்டியிருக்கிறார்.

அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த 77 வயது திருவாட்டி ஹோ டீ கிம் மீது கார் மோதியது. திருவாட்டி ஹோ உடனே கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வலது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிகிச்சைக்காக அவர் ஒரு மாத காலம் மருத்துவமனையில் தங்கியிருக்க நேரிட்டது. அது மட்டுமல்லாமல் நூறு நாள்களுக்கு மேல் அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மற்றவருக்கு காயம் விளைவித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ 5,000 வெள்ளி அபராதமோ விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!