தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடித் தடுப்பு நடவடிக்கை; சந்தேகப்பேர்வழிகள் 11 பேர் கைது

1 mins read
413b984f-65b2-4847-a695-176d03aae3fb
அதிகாரிகள் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை எடுத்த நடவடிக்கைகளில் 11 சந்தேகப்பேர்வழிகள் சிக்கினர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை 

சிங்கப்பூரில் வங்கி தொடர்பான திருட்டுச் செயலி மோசடிகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவதையொட்டி 11 பேர் கைதாகி இருக்கிறார்கள்.

அவர்களில் நான்கு பேர் பதின்ம வயது இளைஞர்கள். காவல்துறை சனிக்கிழமை இந்த விவரங்களைத் தெரிவித்தது.

பதின்ம வயது இளைஞர்களில் மூன்று பேர் ஆண்கள், ஒருவர் பெண். அவர்களுக்கு வயது 16 முதல் 19 வரை.

இதர ஏழு சந்தேகப்பேர்வழிகளில் ஆறு பேர் ஆடவர்கள், ஒருவர் மாது. அவர்களுக்கு வயது 20 முதல் 57 வரை.

வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் காவல்துறையைச் சேர்ந்த வேவுத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் செப்டம்பர் 11 முதல் 22 வரை எடுத்த நடவடிக்கைகளில் அந்தச் சந்தேகப்பேர்வழிகள் சிக்கினர்.

காவல்துறை விசாரணையில் இதர ஐந்து ஆடவர்களும் ஒரு மாதும் உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்