அஞ்சல் கட்டணம் உயர்ந்தாலும் இதர நாடுகளைவிட அதிகமாக இருக்காது

சிங்கப்பூரில் அஞ்சல் கட்டணம் இன்னும் சில நாட்களில் உயரும்.

கட்டணம் அதிகரித்த பிறகும் இதர நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அளவில்தான் இங்கு கட்டணம் தொடர்ந்து இருக்கும் என்று தகவல் தொடர்பு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.

நடைமுறைச் செலவு கூடுகிறது. அதே வேளையில் அனுப்பப்படுகின்ற அஞ்சல்களின் அளவும் குறைகிறது. அதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் சிங்போஸ்ட் நிறுவனம், அக்டோபர் 9ஆம் தேதி முதல் பொதுவான அஞ்சலுக்கான கட்டணத்தை 31 காசில் இருந்து 51 காசாக உயர்த்துகிறது. இது சுமார் 65% அதிகரிப்பாகும்.

இதற்கு முன் 2014ஆம் ஆண்டில்தான் கட்டணம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இதன் தொடர்பிலான உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த மூத்த துணை அமைச்சர், அஞ்சல் கட்டணத்தை உயர்த்த சிங்போஸ்ட் விடுத்த வேண்டுகோளைத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அங்கீகரித்து இருப்பதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் அஞ்சல் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் கட்டணத்துடன் ஒப்பிடும் அளவில்தான் இருக்கும் என்று அவர் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!