தம் சட்ட நிறுவனத்தின் கட்சிக்காரர் கணக்குகளில் இருந்து $76 மில்லியனைக் கையாடிய முன்னாள் வழக்கறிஞர் ஜெஃப்ரி ஓங் சூ ஆன், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு $6.58 மில்லியனைச் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதியைக் கையாடல் செய்ததற்காக 19 ஆண்டு சிறைத் தண்டனையை ஓங் அனுபவித்து வருகிறார்.
செயல்பாடுகளை நிறுத்திக்கொண்ட எண்ணெய், எரிவாயு தளவாடவியல் சேவை நிறுவனமான ஏர்டிரஸ்ட் (சிங்கப்பூர்), தனக்கு ஏற்பட்ட இழப்பை மீட்டெடுக்க செப்டம்பர் 13ஆம் தேதி ஓங்கிற்கும் மேலும் நால்வருக்கும் எதிராக சிவில் வழக்கு தொடுத்தது.
ஏர்டிரஸ்ட், ஏலைட் டெக் உட்பட ஐந்து நிறுவனங்களிடம் இருந்து ஓங் பணத்தைக் கையாடினார்.
2019 மே 13ஆம் தேதி மலேசியாவுக்குத் தப்பிச்சென்ற அவர், அதே மாதம் 29ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டார்.
வழக்கறிஞர் பணியில் ஈடுபட கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓங்கிற்குத் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜூலையில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையே சிங்கப்பூரில் வழக்கறிஞர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஆக நீண்ட சிறைத் தண்டனையாகும்.