புக்கிட் மேராவில் இயற்கைக்கு மாறான மரணம்: காவல்துறை விசாரணை

அசைவற்ற நிலையில் ஆடவர் ஒருவர் புக்கிட் மேரா வியூ வீவக வீட்டில் சனிக்கிழமை (நவம்.4) கிடந்தார். காவல்துறைக்கு காலை 9.15மணிக்கு தகவல் கிடைத்தது.

அவர் இறந்துவிட்டார் என்று அங்கு சென்ற காவல் துறையினர் தெரிவித்தனர். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்பதால் விசாரணை தொடர்கிறது. இறந்தவருடன் 55 வயது ஆடவர் ஒருவரும் வீட்டில் இருந்திருக்கிறார். போதைப் புழக்க குற்றம் புரிந்த சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியை அறிந்த அவரின் மூத்த சகோதரி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மறைந்த ஆடவர் திருமணமாகாதவர், துப்புரவுப் பணியாளர் எனவும் உணவு விநியோகப் பணியாற்றும் ஒருவருடன் அவ்வீட்டில் வாழ்ந்துவந்தார் என்றும் கூறினார்.

அந்த வாடகை வீட்டுக்குச் செல்லக்கூடிய பாதையை காவல் துறை தடுப்புகள் வைத்து மறைத்துள்ளதாகவும், ஆடவர் ஒருவரை அதிகாரிகள் விசாரிப்பதாகவும் ஷின்மின் சீன நாளிதழ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!