அக்டோபர் மாதம் யூதர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக புண்படுத்தும் கருத்துகள் தெரிவித்தது தொடர்பாக எட்டுப் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
இது கிட்டத்தட்ட ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கையை ஒத்திருப்பதாக அவர் விளக்கினார்.
அக்டோபர் மாதப் புகார் எண்ணிக்கை மிகவும் அதிகமானது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் விளைவாக இந்த வட்டார தீவிரவாத இணையத்தளப் பதிவுகள் மும்மடங்கு அதிகரித்துள்ளதையும் திரு வோங் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமையன்று சுட்டினார்.
அத்துடன், இவ்வட்டார தீவிரவாத இணையத்தளங்களில் சிங்கப்பூருக்கு எதிரான கருத்துப் பதிவுடன் வன்முறை தொடர்பான மிரட்டல்களும் அதிரித்து வருவதை சிங்கப்பூர் அரசாங்கம் காண்பதாக அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக நாடாளுமன்ற தீர்மான விவாதத்தின்போது துணைப் பிரதமர் வோங் மேற்கண்டவாறு பேசினார்.