போலி ‘வாட்ஸ்அப் வெப்’ மோசடியால் $606,000 இழப்பு

நவம்பர் தொடக்கத்தில் இருந்து, போலி ‘வாட்ஸ்அப் வெப்’ பக்கங்கள் தொடர்பிலான மோசடிக்கு குறைந்தது 237 பேர் ஆளாகியுள்ளனர்.

அவர்கள் இழந்த மொத்த தொகை $606,000 எனக் காவல்துறை திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அதிகாரபூர்வ ‘வாட்ஸ்அப் வெப்’ இணையப் பக்கத்தைத் தேடிய பயனாளர்கள், சரிபார்க்கப்படாத ‘யுஆர்எல்’ இணைப்புகளைச் சொடுக்கினர். இதன் மூலம் பயனாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

வாட்ஸ்அப் கணக்கு பயனாளர்களைப்போல ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்கள், கணக்கின் தொடர்புப் பட்டியலில் உள்ள பயனாளர்களின் குடும்பத்தார் அல்லது நண்பர்களைத் தொடர்புகொண்டு கடன் கேட்டனர்.

தங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக மோசடிக்காரர்கள் கோரினர். எடுத்துக்காட்டாக, மருத்துவ அவசரநிலை காரணமாக பணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் பணம் மாற்றுவதில் வரம்பு இருந்ததால் வங்கிக் கணக்குகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் மோசடிக்காரர்கள் கூறினர்.

“தங்களுக்குப் பணம் எதுவும் கிடைக்கவில்லை எனக் குடும்பத்தார் அல்லது நண்பர்கள் சொன்ன பிறகே தாங்கள் மோசடிக்கு ஆளாகியிருப்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்தனர்,” என்று காவல்துறை கூறியது.

வாட்ஸ்அப்பின் ஈரடுக்குப் பாதுகாப்பு அம்சத்தைச் செயல்பாட்டில் வைத்திருப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்துகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!