‘யூஹுவா பகுதியில் புதிய உடற்பிடிப்பு நிலையங்களுக்கு அனுமதியில்லை’

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து யூஹுவா பகுதியில் புதிய உடற்பிடிப்பு நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

இது பற்றிக் கூறிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சருமான கிரேஸ் ஃபூ, அந்தப் பகுதியில் உள்ள உரிமம் பெற்ற உடற்பிடிப்பு நிலைய எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக காவல்துறையினருடன் தான் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதில், காவல்துறையினரும் அடிக்கடி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் விளக்கினார்.

இதன் தொடர்பில் உடற்பிடிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட பகுதி ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 பகுதியில், குறிப்பாக, புளோக் 342லிருந்து 354 வரையிலான பகுதியாகும்.

இந்தப் பகுதியில் உடற்பிடிப்பு நிலையத்துக்கான அனுமதி கடைசியாக நவம்பர் 2022ல் வழங்கப்பட்தாகவும் அவர் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1க்கும் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32க்கும் இடையே உள்ள பகுதியில் அண்மைய ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட உடற்பிடிப்பு நிலையங்கள் தோன்றியுள்ளதாக ஷின் மின் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இவற்றில் சில பாலியல் சேவை வழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!