செய்தித்தாள் விநியோகம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

செய்தித்தாள் விநியோகிப்பாளர்களுக்கு இது சவால்மிக்க காலமாக இருந்துவருகிறது. ஒரு நாளில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள், மாதம் $200 முதல் $700 வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.

தொழிலில் ஏற்பட்டுள்ள சவால்களால் சம்பள உயர்வின்றி அவர்கள் வேலை பார்ப்பது தெரியவந்துள்ளது. அதிகாலை 3 மணிக்கே அவர்களின் அன்றாடப் பணி தொடங்குகிறது.

மின்னிலக்கமயமாகிவரும் இந்தக் காலத்தில் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கும் பெரிய அளவில் குறைந்து வருகிறது.

செய்தித்தாள் விநியோகக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் சில விநியோகிப்பாளர்களின் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் செலவுகளாலும் அச்சுப் பிரதிக்கான சந்தா விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவாலும் தங்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் செய்தி விநியோகிப்பாளர் சங்கத்தினரும் (எஸ்என்விஏ) சிங்கப்பூர் செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் சங்கத்தினரும் (எஸ்என்டிஏ) தெரிவித்தனர்.

இதுகுறித்து சந்தாதாரர்களாகிய உங்களின் கருத்துகள் நிறுவனத்திற்குத் தேவை. இந்த கியூஆர் குறியீட்டை வருடி உங்கள் கருத்தைப் பதிவிடவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!