டெங்கியைக் கண்டறிய உதவும் இதயப் பரிசோதனைக் கருவி

இதயச் செயலிழப்பைக் கண்டறிய உதவும் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி, ஆரம்பகட்ட டெங்கி நோயாளிகள் கடுமையாக பாதிப்படும் அபாயத்தை அடையாளம் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள இதயச் செயலிழப்பைக் கண்டறிய உதவும் பரிசோதனைக் கருவியைச் சற்று மாற்றியமைத்தால் அது சாத்தியமாகும்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையம் (என்சிஐடி) ஆகியவற்றின் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் அது தெரியவந்தது.

டெங்கி நோயாளியின் ரத்தத்தில் உள்ள இரண்டு வேதிப்பொருள்கள் அவருக்குக் கடுமையான டெங்கிக் காய்ச்சல் ஏற்படக்கூடிய அபாயத்தை அடையாளம்காண உதவும் என்று ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது.

இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்தத்திலும் அதே வேதிப்பொருள்கள் காணப்படும் என்று அக்குழு கூறியது.

சிங்கப்பூரில் டெங்கிக் காய்ச்சல் மிதமான நோயாகக் கருதப்படுகிறது. இருப்பினும், டெங்கி நோயாளிகளில் 15 விழுக்காட்டினர் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும். அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும். தற்போதைய டெங்கிப் பரிசோதனை முறைகள் அந்நோயின் கடுமையைக் கண்டறிய நீண்ட நேரம் எடுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!