உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் சேவை வழங்கியதாக பெண்கள் மூவர் கைது

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் சேவை வழங்கியதாகக் கூறப்படும் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 27வயதுக்கும் 46வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

நவம்பர் 29, டிசம்பர் 12ஆம் தேதிகளில் ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1லும் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21லும் இயங்கும் உடற்பிடிப்பு நிலையங்களில் காவல்துறையினர் நடத்திய அமலாக்கச் சோதனையின்போது கைது நடவடிக்கை இடம்பெற்றது.

பல்வேறு குற்றங்களில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உடற்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் நால்வரும் பெண்கள் மூவரும் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

இரண்டு உடற்பிடிப்பு நிலையங்கள் உரிமமின்றி செயல்பட்டது கண்டறியப்பட்டது. உரிமம்பெற்ற மற்ற இரு உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் நடவடிக்கைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

கிளமெண்டி காவல்துறைப் பிரிவும் குற்றவியல் புலனாய்வுத் துறையும் இணைந்து அமலாக்கச் சோதனையில் ஈடுபட்டன.

ஜூரோங் ஈஸ்ட்டில் உடற்பிடிப்பு நிலையங்கள் அதிகரித்து இருப்பது குறித்து குடியிருப்பாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!