டோட்டோ முதல் பரிசு $10 மில்லியனாக அதிகரிப்பு

கடந்த மூன்று குலுக்கல்களில் வெற்றியாளர் இல்லை

வியாழக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறும் டோட்டோ குலுக்களுக்கான முதல் பரிசுத் தொகை $10 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று குலுக்கல்களில் முதல் பரிசை எவரும் வெல்லாத நிலையில், பரிசுத் தொகை அதிகரித்துள்ளது.

கடந்த குலுக்கல்களில் முதல் பரிசுத் தொகை $1.2 மில்லியனிலிருந்து $2.78 மில்லியனாகவும் பின்னர் $5.61 மில்லியனாகவும் கூடியது.

திங்கட்கிழமை (டிசம்பர் 18) நடந்த கடைசி டோட்டோ குலுக்கலில் இரண்டாம் பரிசை (Group 2) நான்கு பேர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் $148,395 பரிசுத் தொகையை வென்றனர்.

அந்த நான்கு குலுக்கல் சீட்டுகளும் ‘சிஸ்டம் 7’ வகையைச் சேர்ந்தவை. அவற்றில் ஒன்று இணையத்தில் வாங்கப்பட்டது.

மற்ற மூன்று குலுக்கல் சீட்டுகளும் என்டியுசி ஃபேர்பிரைஸ் புக்கிட் பாத்தோக் எம்ஆர்டி நிலையம், என்டியுசி ஃபேர்பிரைஸ் ‘வேர்ஹவுஸ் கிளப் @ ஜூ கூன்’, புளோக் 211 ஹவ்காங் ஸ்திரீட் 21ல் உள்ள சிங்கப்பூர் புல்ஸ் கிளையில் விற்கப்பட்டன.

‘சிஸ்டம் 7’ குலுக்கல் சீட்டின் விலை $7. அது ஏழு சாதாரண குலுக்கல் சீட்டுகளுக்குச் சமம்.

பொதுவாக மாலை 6.30 மணிக்கு நடைபெறும் டோட்டோ குலுக்கல், வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!