ஆஸ்திரேலிய டாக்சி நிறுவனத்தை வாங்குகிறது கம்ஃபர்ட் டெல்குரோ

சிங்கப்பூரின் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் ‘ஏ2பி ஆஸ்திரேலியா’ என்னும் டாக்சி கட்டமைப்பு நிறுவனத்தின் எல்லா பங்குகளையும் வாங்கப்போவதாகத் தெரிவித்து உள்ளது.

ஆஸ்திரேலிய டாக்சி நிறுவனமான ‘ஏ2பி’, தனிநபர் போக்குவரத்துத் துறையில் மின்னிலக்கம்வழி பணம் செலுத்துவதற்கான தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது.

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள அந்நிறுவனம், ‘13கேப்ஸ்’ மற்றும் ‘சில்வர் சர்விஸ்’ என்னும் பெயரிலான டாக்சி சேவைகளுடன் ‘கேப்சார்ஜ்’ என்னும் மின்னிலக்கப் பணம் செலுத்துதல் சேவையையும் அளிக்கிறது.

கம்ஃபர்ட்டெல்குரோவும் அதன் ஆஸ்திரேலிய துணை நிறுவனமான ‘ஸ்வான் டாக்சிஸ்’ நிறுவனமும் ஏ2பியில் 9.3 விழுக்காட்டுப் பங்குகளை வைத்துள்ளன.

எஞ்சியுள்ள பங்குகளையும், பங்கு ஒன்றுக்கு 1.45 ஆஸ்திரேலிய டாலர் என்னும் விலை கொடுத்து வாங்குவது பற்றி கம்ஃபர்ட் டெல்குரோ பரிசீலித்து வருகிறது.

அந்தப் பங்குகளின் மொத்த மதிப்பு 165.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$145.7 million). அதன் பின்னர், ஏ2பி நிறுவனம் முழுமையாக கம்பஃபர்ட் டெல்குரோ வசம் வந்துவிடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!