நியூயார்க் பூங்காவில் தவறி விழுந்து மாண்ட சிங்கப்பூர் மாது

நியூயார்க்கில் மின்னவாஸ்கா மாநில பூங்காவில், டிசம்பர் 22 ஆம் தேதி அன்று 39 வயதான சிங்கப்பூர் பெண்ணான திருவாட்டி நூர் ஆயிஷா 30 மீட்டர் உயர செங்குத்துப் பாறையிலிருந்து விழுந்து இறந்தார்.

இதைப் பற்றி தன் முகலூலில் பகிர்ந்துகொண்ட அந்தப் பெண்ணின் கணவர்,திரு அப்துல் ரவுஃப், இருவரும் பூங்காவில் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்நிகழ்வு ஏற்பட்டது என்று பகிர்ந்துகொண்டார்.

மேலும், தன் மனைவியைக் காப்பாற்ற முன்வந்த அவர், சற்று நழுவியதாகவும், இருப்பினும் விழவில்லை என்றும் தெரிவித்தார். உதவிக்குக் கத்தியபோது மூன்று சகோதரிகள் உட்பட சில பூங்கா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தாகவும் அவர் தன் முகலூலில் எழுதியிருந்தார்.

அவரை காப்பாற்றியபோது, அவர் சுவாசித்துக் கொண்டிருந்தாகவும் ஹெலிகாப்டரிலிருந்து மருத்துவ வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டபோது அவரது சுவாசம் நின்றுவிட்டது என்றும் திரு அப்துல் ரவுஃப் பகிர்ந்துகொண்டார்.

இருவரும், “நோபல் ஸ்கை இன்டர்நேஷனல்” என்ற சொத்துச் சந்தை முதலீட்டு நிறுவனத்தின் இணை  நிறுவனர்களான அவர்கள் வேலை நிமித்தமாக அமெரிக்காவிற்கு அடிக்கடி பயணம் செய்தார்கள்.

திரு அப்துல் ரவுஃப், இன்னும் அமெரிக்காவில் இருப்பதாகவும், தனது மனைவியின் பிரேத பரிசோதனைக்காக காத்திருப்பதாகவும் டிசம்பர் 24ஆம் தேதி அன்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பகிர்ந்துகொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!